|
அத்தியாயம்-4
சூரத்துன்னிஸா (பெண்கள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து
நடந்து கொள்ளுங்கள்,
அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து
படைத்தான்,
அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;.
பின்னர் இவ்விருவரிலிருந்து,
அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி
உலகில்) பரவச் செய்தான்;.
ஆகவே,
அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;.
அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர்
(தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;.
மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய
உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக
அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே
இருக்கின்றான்.
4:2. நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு
வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து
விடுங்கள்;.
நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து
விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்கள்
பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள்
- நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
4:3 .அநாதை(ப் பெண்களைத் திருமணம்
செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க
முடியாது என்று பயந்தீர்களானால்,
உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து
கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ,
மும்மூன்றாகவோ,
நன்னான்காவோ. ஆனால்,
நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது
என்று பயந்தால்,
ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்),
அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர்
அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக்
கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம்
செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
4:4 .நீங்கள் (மணம் செய்து கொண்ட)
பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை
மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் -
அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள்
உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக,
மகிழ்வுடன் புசியுங்கள்.
4:5 .(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள்
மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி
குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு)
ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த
செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் -
எனினும்,
அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்;.
ஆடையும் அளியுங்கள்;.
இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே
பேசுங்கள்.
4:6 .அநாதைகளை அவர்கள் திருமண வயது
அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி)
சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப்
பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை
நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக
நீங்கள் அறிந்தால்,
அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;.
அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத்
திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள்
சொத்தை அவசர அவசரமாகவும்,
வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும்
(அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்)
செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து
ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் -
ஆனால்,
அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு
சாப்பிட்டுக் கொள்ளவும்;.
மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம்
ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை
ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்)
கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
4:7 .பெற்றோரோ,
நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில்
ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ,
நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில்
பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள
சொத்து) குறைவாக இருந்தாலும் சரி,
அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்)
விதிக்கப்பட்ட பாகமாகும்.
4:8 .பாகப்பிரிவினை செய்யும் போது
(பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ,
அநாதைகளோ,
ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும்
அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;.
மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே
பேசுங்கள்.
4:9 .தங்களுக்கு பின்னால் பலஹீனமான
சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை
என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள்
பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்)
கொள்ளட்டும்;.
மேலும் அல்லாஹ்வை அஞ்சி,
இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.
4:10 .நிச்சயமாக,
யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக
விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில்
விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும்
அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும்
(நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.
4:11 .உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு,
இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது
கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு
உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து
அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால்
அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில்
மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே
பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்;
இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர்
விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது)
பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால்
இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர்
மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு
மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு
உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால்
அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி
தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக்
கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும்,
கடனையும் நிரைவேற்றிய பின்னர்தான்;.
உங்கள் பெற்றோர்களும்,
குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில்
உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று
நீங்கள் அறிய மாட்டீர்கள்;.
ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை)
அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்;.
நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்)
நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும்
இருக்கின்றான்.
4:12 .இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச்
சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை
இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு.
அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள்
விட்டுச் சென்றவற்றிலிருந்து. உங்களுக்கு கால்
பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற
மரண சாஸனத்தையும்,
கடனையம் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர
உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள்
விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால்
பாகம்தான்;.
உங்களுக்குப் பிள்ளை இருந்தால்,
அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில்
எட்டில் ஒரு பாகம்தான்;
(இதுவும்)
நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும்
கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்;.
தந்தை,
பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை,
பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ
அல்லது ஒரு பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ
அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள்
ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால்
இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு
பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் -
(இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும்
நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸனத்தைக்
கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக்
கூடாது. (இது) அல்லாஹ்வினால்
விதிக்கப்பட்டதாகும்;.
இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்)
நன்கறிந்தவனாகவும்,
மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
4:13 .இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்;.
எவர் அல்லாஹ்வுக்கும்,
அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ
அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;.
அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும்,
அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது
மகத்தான வெற்றியாகும்.
4:14 .எவன் அல்லாஹ்வுக்கும்,
அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ,
இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ
அவனை நரகில் புகுத்துவான்;.
அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;.
மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.
4:15 .உங்கள் பெண்களில் எவளேனும்
மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம்
சுமத்தப்பட்)டால்,
அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை
அழையுங்கள்;.
அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி
கூறிவிட்டால்,
(அப்பெண்களை)
மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு
அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை
வீடுகளில் தடுத்து வையுங்கள்.
4:16 .உங்களில் அதை (விபச்சாரத்தை)
செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்;.
அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து
வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக்
கொண்டால்,
அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்
மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.
4:17 .எவர்கள் அறியாமையினால் தீமை
செய்துவிட்டு,
பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி
கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான்
அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு. உண்டு. அல்லாஹ்
அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும்
அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக
இருக்கின்றான்.
4:18 .இன்னும் எவர்கள் தீவினைகளைத்
(தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து,
முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது,
''நிச்சயமாக
இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி)
மன்னிப்புத் தேடுகிறேன்"" என்று கூறுகின்றார்களோ,
அவர்களுக்கும்,
எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ
அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை,
இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே
நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
4:19 .நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை
(அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்)
நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது
உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை
அவர்கள் செய்தாலொழிய,
பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை
எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத்
(துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;.
இன்னும்,
அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் -
நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை
ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில்
அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
4:20 .நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி
விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை
(மணந்து கொள்ள) நாடினால்,
முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே
கொடுத்திருந்த போதிலும்,
அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக்
கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும்,
பகிரங்கமாகப் பாவகரமாகவும்,
அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
4:21 .அதனை நீங்கள் எப்படி எடுத்துக்
கொள்வீர்கள்?
உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி
பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!
4:22 .முன்னால் நடந்து போனதைத் தவிர,
(இனிமேல்)
நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட
பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து
கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும்,
வெறுக்கக்கூடியதும்,
தீமையான வழியுமாகும்.
4:23 .உங்களுக்கு (மணமுடிக்க)
விலக்கப்பட்டவர்கள்;
உங்கள் தாய்மார்களும்,
உங்கள் புதல்வியரும்,
உங்கள் சகோதரிகளும்,
உங்கள் தந்தையின் சகோதரிகளும்;
உங்கள் தாயின் சகோதரிகளும்,
உங்கள் சகோதரனின் புதல்வியரும்,
உங்கள் சகோதரியின் புதல்வியரும்,
உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்)
தாய்மார்களும்,
உங்கள் பால்குடி சகோதரிகளும்,
உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்;
அவ்வாறே,
நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன்
நீங்கள் சேர்ந்துவிட்டால்,
அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள்
கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம்
செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த
பின்னர்,
அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி
அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம்
செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை.
உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும்
நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு
சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று
சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து
விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து
விட்டமையால்),
நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும்,
கருணையுடையோனுமாக இருக்கின்றான்..
4:24 .இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள்
ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர,
கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது
விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ்
உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத்
தவிர,
மற்றப் பெண்களை,
தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல்,
அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக)
கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது
உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு
(சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து
நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக
(விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து
விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின்
அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும்
சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது
- நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும்,
ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
4:25 .உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள
முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள
சக்தியில்லையோ,
அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள்
வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை
(மணமுடித்துக் கொள்ளலாம்;).
அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில்
சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்;.
ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின்
எஜமானர்களின் அனுமதி கொண்டு,
மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய
(மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;.
அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும்,
விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளநட்புக்
கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே,
அப்பெண்கள் முறைப்படி திருமணம்
முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால்,
விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது
விதிக்கப்படும் தண்டனையில் பாதியே
அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;.
தவிர,
உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும்
என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ -
அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள்
பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும்
நல்லதாகும்;.
இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்,
மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
4:26 .அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை)
உங்களுக்குத் தெளிவாக விளக்கவும்,
உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற
(நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும்,
உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே
விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு
அறிந்தோனாகவும்,
ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
4:27 .மேலும் அல்லாஹ் உங்களுக்குப்
பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்;.
ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி
நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து
திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட
வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
4:28 .அன்றியும்,
அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு
இலேசாக்கவே விரும்புகிறான்;.
ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே
படைக்கப்பட்டுள்ளான்.
4:29 .நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில்
ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில்
ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல்,
ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில்
உண்ணாதீர்கள்;.
நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் -
நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க
கருணையுடையவனாக இருக்கின்றான்.
4:30 .எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை
மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால்,
விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச்
செய்வோம்;.
அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.
4:31 .நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில்
பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய
குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை
மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.
4:32 .மேலும் எதன் முலம் உங்களில் சிலரை
வேறு சிலரைவிட அல்லாஹ்
மேன்மையாக்கியிருக்கின்றானோ,
அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்;.
ஆண்களுக்கு,
அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு.
(அவ்வாறே) பெண்களுக்கும்,
அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு.
எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்;.
நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு
அறிந்தவனாக இருக்கின்றான்.
4:33 .இன்னும்,
தாய் தந்தையரும்,
நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற
செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்)
வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்;.
அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து
கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை
அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்;.
நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும்
சாட்சியாளனாக இருக்கிறான்.
4:34 .(ஆண்,
பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட
மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்)
தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்)
செலவு செய்து வருவதினாலும்,
ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக
இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர்
(தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும்,
பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்)
இல்லாத சமயத்தில்,
பாதுகாக்கப்பட வேண்டியவற்றை,
அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு,
பாதுகாத்துக் கொள்வார்கள்;.
எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம்
கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள்
அஞ்சுகிறீர்களோ,
அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;.
(அதிலும்
திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து
விலக்கிவிடுங்கள்;.
(அதிலும்
திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள்.
அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால்,
அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள்
- நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும்,
வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
4:35 .(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே
(பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று
நீங்கள் அஞ்சினால். கணவனின் உறவினர்களிலிருந்து
ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து
ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்;
அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால்,
அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி
செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு
அறிபவனாகவும்,
நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
4:36 .மேலும்,
அல்லாஹ்வையே வழிபடுங்கள்;.
அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும்,
தாய் தந்தையர்க்கும்,
நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும்,
ஏழைகளுக்கும்,
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்,
அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும்,
(பிரயாணம்,
தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக
இருப்போருக்கும்,
வழிப்போக்கர்களுக்கும்,
உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம்
செய்யுங்கள்;.
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக,
வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை
நேசிப்பதில்லை.
4:37 .அத்தகையோர் உலோபத்தனம் செய்வதுடன்,
(பிற)
மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி
அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக்
கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்;.
அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை
நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
4:38 .இன்னும்,
எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத்
தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன்,
அல்லாஹ்வையும் இறுதி நாளையும்
நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்
கூட்டாளியாவான்). எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக
இருக்கின்றானோ,
அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை
அறியவேண்டாமா?)
4:39 .இவர்கள் அல்லாஹ்வையும்,
இறுதி நாளையும் நம்பி இவர்களுக்கு அல்லாஹ்
வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்களானால்.
இவர்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிடப் போகிறது?
அல்லாஹ் இவர்களை நன்கறிபவனாகவே இருக்கின்றான்.
4:40 .நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்)
ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்;
(ஓர்
அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை
இரட்டித்து,
அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து
(அல்லாஹ்) வழங்குகின்றான்.
4:41 .எனவே (நபியே!) ஒவ்வொரு
கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம்
கொண்டுவரும்போது,
நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு
வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை)
எப்படி இருக்கும்?
4:42 .அந்த நாளில்,
(இவ்வாறு)
(அல்லாஹ்வை) நிராகரித்து,
(அல்லாஹ்வின்)
தூதருக்கும் மாறு செய்தவர்கள்,
பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா
என்று விரும்புவார்கள்;.
ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும்
அவர்கள் மறைக்கமுடியாது.
4:43 .நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள்
ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள
முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது
தொழுகைக்கு நெருங்காதீர்கள்;.
அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது
குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்;
பள்ளியை). பாதையாக கடந்து சென்றால் தவிர.
நீங்கள் நோயாளியாகவோ,
யாத்திரையிலோ,
மலஜலம் கழித்தோ,
பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து
கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத்
தொட்டு உங்களுடைய முகங்களையும்,
உங்களுடைய கைகளையும் தடவி
''தயம்மும்""
செய்து கொள்ளுங்கள்;
(இதன்பின்
தொழலாம்). நிச்சயமாக அல்லாஹ் பிழை
பொறுப்பவனாகவும்,
மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
4:44 .(நபியே!) வேதத்திலிருந்து ஒரு
பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா?
அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக்
கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும்
என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
4:45 .மேலும்,
அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்;
.(உங்களுக்குப்)
பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்;.
(உங்களுக்கு)
உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.
4:46 .யூதர்களில் சிலர் வேத வாக்குகளின்
(கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து
புரட்டுகின்றனர்;.
(இன்னும்
உம்மை நோக்கி,
'நபியே!
நீர் சொன்னதை) நாம் கேட்டோம்,
அதற்கு மாறாகவே செய்வோம்;,
இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்;
(நீர்
கூறுவது) செவியேறாது போகட்டும்!" என்று கூறி,
'ராயினா"
என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி)
சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்;.
(ஆனால்
இதற்குப் பதிலாக) அவர்கள்
''நாம்
செவியேற்றோம்,
இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;""
(இன்னும்
நாம் சொல்வதை) கேளுங்கள்;,
எங்களை அன்போடு கவனியுங்கள்,
(உள்ளுர்னா)
என்று கூறியிருப்பார்களானால்,
அது அவர்களுக்கு நன்மையாகவும்,
மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால்
அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக,
அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;.
ஆகையால்,
குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
4:47 .வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம்
உங்கள் முகங்களை மாற்றி,
அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு
முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய)
''அஸ்ஹாபுஸ்
ஸப்து"" என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும்
முன்னே,
உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப்
பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்;.
அல்லாஹ்வின் கட்டளை,
நிறைவேற்றப்பட்டே தீரும்.
4:48 .நிச்சயமாக அல்லாஹ் தனக்கு
இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;.
இதைத்தவிர,
(மற்ற)
எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;.
யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள்
நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை
செய்கின்றார்கள்.
4:49 .(நபியே!) தங்களைத் தாங்களே
பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை
நீர் பார்க்கவில்லையா?
(அவர்கள்
கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப்
பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும்
ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
4:50 .(நபியே!) அவர்கள் எவ்வாறு
அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை
செய்கிறார்கள் என்பதை கவனியும்;.
இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப்
போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.
4:51 .(நபியே) வேதத்தில் ஒரு பாகம்
கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா?
இவர்கள் சிலைகளையும்,
ஷைத்தானையும்,
நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம்
நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில்
இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
4:52 .இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்;.
எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி
செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
4:53 .இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு
பாகமாவது இருக்கிறதா?
அப்படியிருந்தால்,
(மற்ற)
மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும்
கொடுக்க மாட்டார்கள்.
4:54 .அல்லாஹ் தன் அருளினால்
மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள்
பொறாமை கொள்கின்றார்களா?
இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின்
சந்ததியினருக்கு வேதத்தையும்,
ஞானத்தையும் கொடுத்தோம்;.
அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும்
அவர்களுக்குக் கொடுத்தோம்.
4:55 .(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர்
நம்பிக்கை கொண்டார்கள்;.
சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக்
கொண்டார்கள்;.
(இவ்வாறு
முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு
எரியும் நரகமே போதுமானது.
4:56 .யார் நம் வேதவசனங்களை
நிராகரிக்கிறார்களோ,
அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி
விடுவோம்;.
அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம்
அவையல்லா (வேறு) தோல்களை,
அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென,
அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் -
நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும்
ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
4:57 .(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு,
நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை
சுவனபதிகளில் புகுத்துவோம்,
அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;.
அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்;
அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர்
உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச்
செய்வோம்.
4:58 .நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட
அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம்
நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும்,
மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே
தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு
நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;.
நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும்
சிறந்த உபதேசம் செய்கிறான்;.
நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்)
செவியுறுவோனாகவும்,
பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
4:59 .நம்பிக்கை கொண்டவர்களே!
அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்;
இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும்,
உங்களில் (நேர்மையாக) அதிகாரம்
வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில்
ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் -
மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும்,
இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை
அல்லாஹ்விடமும்,
(அவன்)
தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான்
(உங்களுக்கு) மிகவும் சிறப்பான,
அழகான முடிவாக இருக்கும்.
4:60 .(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ்
வேதத்)தையும்,
உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள்
அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக்
கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா?
- (எந்த
ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று
அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த
ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள
வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ
அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட
விரும்புகிறான்.
4:61 .மேலும் அவர்களிடம்;
''அல்லாஹ்
இறக்கிய (வேதத்)தின் பக்கமும்,
(அவனுடைய)
தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்""
என்று கூறப்பட்டால்,
அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்)
உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே
நீர் பார்ப்பீர்.
4:62 .அவர்களின் கைகள்
முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால்,
அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால்
எப்படியிருக்கும்?
அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின்
மேல் சத்தியம் செய்து
''நாங்கள்
நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்)
நாடவில்லை"" என்று கூறுகின்றனர்.
4:63 .அத்தகையோரின் உள்ளங்களில்
இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான் - ஆகவே நீர்
அவர்களிடமிருந்து விலகியிரும்,
அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும்;
மேலும்,
அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான
வார்த்தைகளைக் கூறும்.
4:64 .அல்லாஹ்வின் கட்டளைக்கு
கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம்
தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள்
எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து
கொண்டு,
உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி
அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்)
மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை
மன்னிப்பவனாகவும்,
மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள்
கண்டிருப்பார்கள்.
4:65 .உம் இறைவன் மேல் சத்தியமாக,
அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை
நீதிபதியாக,
ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி
எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது
(அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத
வரையில்,
அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
4:66 .மேலும்,
நாம் (அவர்களைப் பார்த்து)
''நீங்கள்
உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள்,
அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து
வெளியேறிவிடுங்கள்"" என்று
கட்டளையிட்டிருப்போமானால்,
அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு
செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு
உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால்,
அது அவர்களுக்கு நன்மையாகவும்,
(அவர்கள்
நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும்
இருந்திருக்கும்.
4:67 .அப்போது,
நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான
நற்கூலியைக் கொடுத்திருப்போம்.
4:68 .மேலும்,
அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.
4:69 .யார் அல்லாஹ்வுக்கும் (அவன்)
தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள்
அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள்,
ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷ{ஹதாக்கள்
(உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள்
(நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன்
இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான
தோழர்கள் ஆவார்கள்.
4:70 .இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து
கிடைத்ததாகும்;
(எல்லாவற்றையும்)
அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக
இருக்கின்றான்.
4:71 .நம்பிக்கை கொண்டவர்களே! (போர்
நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து
கொள்ளுங்கள்;
பிரிவு,
பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ
(எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.
4:72 .(போரிடாமல்) பின்தங்கி
விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக
உள்ளனர்;.
உங்களுக்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால்,
''அவர்களுடன்
கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது
அருள் புரிந்துள்ளான்"" என்று (அவர்கள்)
கூறுகிறார்கள்.
4:73 .அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு
பாக்கியம் கிடைக்குமானால்,
உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத
(அன்னியர்கள்) போல்;
''நானும்
அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா?
நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே!""
என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
4:74 .எனவே மறுவுலக வாழ்க்கைக்காக
இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள்
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக. யார்
அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து
கொல்லப்பட்டாலும் சரி,
அல்லது வெற்றியடைந்தாலும் சரி,
அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக்
கொடுப்போம்.
4:75 .பலஹீனமான ஆண்களையும் பெண்களையும்,
சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக,
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர்
செய்யாதிருக்கக் காரணம் யாது?
(அவர்களோ)
''எங்கள்
இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும்
இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக.
எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு
பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும்
எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும்
அளித்தருள்வாயாக"" என்று பிரார்த்தனை
செய்கிறார்கள்.
4:76 .நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின்
பாதையில் போர் செய்கிறார்கள்;.
நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர்
செய்கிறார்கள்;.
ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின்
நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் -
நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி
பலஹீனமானதேயாகும்.
4:77 .''உங்களுடைய
கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக்
கொண்டும்,
தொழுகையை நிலைநிறுத்தியும்,
ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!"" என்று
எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!)
நீங்கள் பார்க்கவில்லையா?
பின்னர்,
போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக்
கட்டளையிடப்பட்டபோது,
அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப்
பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே
மனிதர்களுக்குப் பயப்பட்டு
''எங்கள்
இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை
விதியாக்கினாய்?
சிறிது காலம் எங்களுக்காக இதைப்
பிற்படுத்தியிருக்கக் கூடாதா?
என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக,
''இவ்வுலக
இன்பம் அற்பமானது,
மறுவுலக(இன்ப)ம்,
பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது. நீங்கள்
எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.""
4:78 .''நீங்கள்
எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;.
நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட
கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச்
சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை
ஏற்பட்டால்
''இது
அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது"" என்று
கூறுகிறார்கள்;.
ஆனால்,
அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ,
''இது
உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது"" என்று
கூறுகிறார்கள்,
(நபியே!
அவர்களிடம்) கூறும்;
''எல்லாம்
அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த
மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?
எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக்
கொள்ள முடியவில்லையே!""
4:79 .உனக்குக் கிடைக்கும் எந்த
நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது.
இன்னும்,
உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது
உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை
மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்)
தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே
போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
4:80 .எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக்
கீழ்படிகிறாரோ,
அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;.
யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை)
நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை,
ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல்
கண்காணிப்பவராக அனுப்பவில்லை.
4:81 .(நபியே! உங்களுக்கு நாங்கள்)
கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்)
கூறுகின்றனர்;.
உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ,
அவர்களில் ஒரு சாரார்,
நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு
முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்;.
அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ்
பதிவு செய்கிறான்;.
ஆகவே,
நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே
நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில்
அல்லாஹ்வே போதுமானவன்.
4:82 .அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக)
சிந்திக்க வேண்டாமா,
(இது)
அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால்,
இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள்
கண்டிருப்பார்கள்.
4:83 .மேலும் பீதியோ,
பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு
எட்டுமானால்,
உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;.
அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ,
அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ
தெரிவித்தால்,
அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள்,
அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச்
செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும்
அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால்,
உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே
பின்பற்றியிருப்பார்கள்.
4:84 .எனவே,
நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக.
உம்மைத் தவிர,
வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை.
எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக.
நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ்
தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை
மிக்கோன்,
இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.
4:85 .எவரேனும் ஒரு நன்மையான
காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு
பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு
தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால்,
அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ்
எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக
இருக்கின்றான்.
4:86 .உங்களுக்கு ஸலாம் கூறப்படும்
பொழுது,
அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக்
கொண்டு) ஸலாம் கூறுங்கள்;.
அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக
அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும்
கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
4:87 .அல்லாஹ்-அவனைத்தவிர
(வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை.
நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன்,
ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை. மேலும்
அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில்
உண்மையுடையோர் யார்?
4:88 .நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள்
இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட)
பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன
நேர்ந்தது?
அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ்
அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்;.
எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ,
அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த
விரும்புகிறீர்களா?
எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ,
நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித
வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.
4:89 .(முஃமின்களே!) அவர்கள்
நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி
நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி
விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;.
ஆகவே,
அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம்
இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில்
அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள்
எடுத்துக் கொள்ளாதீர்கள்;.
(அல்லாஹ்வின்
பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை)
அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு
கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;.
(தப்பியோட
முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து
எவரையும் நண்பர்களாகவோ,
உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
4:90 .ஆனால் அவர்களுக்கும்
உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை
ஏற்பட்டுள்ளதோ,
அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து
கொண்டவர்களையும்,
அல்லது உங்களுடன் போர் புரிவதையோ,
அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர்
புரிவதையோ,
மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும்
(சிறைப்பிடிக்காதீர்கள்,
கொல்லாதீர்கள்). ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால்
அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்;.
அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர்
புரிந்திருப்பார்கள்;.
எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன்
போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள
விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்;.
ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய)
யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு
உண்டாக்கவில்லை.
4:91 .வேறு சிலரையும் நீங்கள்
காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக்
கொள்ளவும்,
(உங்கள்
பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக்
கொள்ளவும் விரும்புவார்கள்;.
எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள்
அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து
விடுவார்கள்;.
இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும்,
உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும்,
(உங்களுக்குத்
தீங்கிழைப்பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக்
கொள்ளாமலும் இருந்தால்,
இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்)
பிடித்துக் கொள்ளுங்கள்;
இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் -
இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான
அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
4:92 .தவறாக அன்றி,
ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது
ஆகுமானதல்ல. உங்களில் எவரேனும் ஒரு முஃமினை
தவறாக கொலை செய்துவிட்டால்,
அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை
விடுதலை செய்ய வேண்டும்;
அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க
வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத்
தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய
கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச்
சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால்,
முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும்
(நஷ்ட ஈடில்லை. இறந்த) அவன் உங்களுடன் சமாதான
(உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச்
சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு
நஷ்ட ஈடு கொடுப்பதுடன்,
முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும்
வேண்டும்;.
இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக
இருந்தால்,
அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத்
தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க
வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும்,
பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
4:93 .எவனேனும் ஒருவன்,
ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின்
அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும்
அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம்
கொள்கிறான்;.
இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான
வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.
4:94 .முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில்
(போருக்கு) நீங்கள் சென்றால்,
(போர்
முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர்
முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக
அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும்
(தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு)
உங்களுக்கு
''ஸலாம்""
சொன்னால்,
இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய
பொருட்களை அடையும் பொருட்டு
''நீ
முஃமினல்ல"" என்று கூறி (அவரைக் கொன்று)
விடாதீர்கள்;.
அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன.
இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து)
இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது
அருள் புரிந்தான்;
எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள்
தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்;.
நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு
அறிந்தவனாகவே இருக்கின்றான்.
4:95 .ஈமான் கொண்டவர்களில் (நோய்,
பலஹீனம்,
முதுமை,
பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி
(வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும்,
தங்களுடைய சொத்துக்களையும்,
தங்களுடைய உயிர்களையும்
(அர்ப்பணித்தவர்களாக)அல்லாஹ்வின் பாதையில் போர்
புரிபவர்களும் சமமாகமாட்டர்கள் தங்களுடைய
பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும்
(அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை,
உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ்
மேன்மையாக்கி வைத்துள்ளான்;.
எனினும்,
ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய
உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ்
வாக்களித்துள்ளான்;.
ஆனால் அறப்போர் செய்வோருக்கோ,
(போருக்குச்
செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ்
மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
4:96 .(இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான)
பதவிகளையும்,
மன்னிப்பையும்,
அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்;.
ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும்,
மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
4:97 .(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது)
எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ
அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது
''நீங்கள்
எந்த நிலையில் இருந்தீர்கள்?""
என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்)
''நாங்கள்
பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா)
பலஹீனர்களாக இருந்தோம்"" என்று கூறுவார்கள்.
அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா?
அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து
போயிருக்கக்கூடாதா?""
என (மலக்குகள்) கேட்பார்கள்;.
எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்;.
சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
4:98 .(ஆனால்) ஆண்களிலும்,
பெண்களிலும்,
சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில்
இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்;
(வெளியேறிச்
செல்ல) வழியும் அறியாதவர்கள்.
4:99 .அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப்
போதுமானவன்;.
ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும்,
பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
4:100 இன்னும் எவர் அல்லலாஹ்வின்
பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ,
அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும்,
விசாலமான வசதிகளையும் காண்பார். இன்னும்,
தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின்
பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும்
நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால்
அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக
அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும்
அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும்,
பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.
4:101 .நீங்கள் பூமியில் பிரயாணம்
செய்யும்போது,
காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று
நீங்கள் அஞ்சினால்,
அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக்
கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. நிச்சயமாக
காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக
இருக்கின்றனர்.
4:102 .(நபியே! போர் முனையில்)
அவர்களுடன் நீர் இருந்து,
அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால்
அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத்
தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்;.
அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை
முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள்
பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்);
அப்பொழுது,
தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன்
தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள்
ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம்,
தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் -
ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும்,
உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனனக் குறைவாக
இருந்தால்,
அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து
(தாக்கி) விடலாமென்று காஃபிர்கள்
விரும்புகின்றனர்;.
ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ,
அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ,
உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது)
கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது.
எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து
கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு
இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி
வைத்திருக்கின்றான்.
4:103. நீங்கள் தொழுகையை முடித்துக்
கொண்டால்,
நின்ற நிலையிலும்,
இருந்த இருப்பிலும்,
விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்)
நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்;.
பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு)
அமைதியான நிலைக்கு வந்ததும்,
முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில்,
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை
நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப்
பெற்றுள்ளது.
4:104. மேலும்,
(பகைக்)
கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம்
குன்றாதீர்கள்;.
நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால்,
நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே
துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து
அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும்
வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவனாகவும்,
ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:105. (நபியே!) அல்லாஹ் உமக்கு
அறிவித்ததைக் கொண்டு,
நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக,
முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை
நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;.
எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி
விடாதீர்.
4:106 .(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம்
மன்னிப்புக் கோரும்,
நிச்சமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை
உடையவனாகவும் இருக்கின்றான்.
4:107 (நபியே!) பிறருக்கு தீமை செய்து
அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக்
கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்;.
ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து
கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ்
நேசிப்பதில்லை.
4:108. இவர்கள் (தங்கள் சதிகளை)
மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;.
ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க
முடியாது. ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத
சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும்
போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும்
அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து
அறிந்தவனாக இருக்கின்றான்.
4:109 .(முஃமின்களே!) என்னே! இத்தகைய
மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள்
வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில்
அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்?
அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக
ஆகுபவன் யார்?
4:110. எவரேனும் ஒரு தீமையைச்
செய்துவிட்டு,
அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர்
அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக்
கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும்
மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
4:111. எவன் பாவத்தைச் சம்பாதிக்காறானோ
அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக
சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்)
அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:112. மேலும்,
எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ
சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி
மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக
அவதூற்றையும்,
பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
4:113. (நபியே!) உம் மீது அல்லாஹ்வின்
அருளும்,
அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால்,
அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி
நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;.
ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி
செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த
விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும்
அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும்
இறக்கியுள்ளான்;.
நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக்
கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின்
அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.
4:114. (நபியே!) தர்மத்தையும்,
நன்மையானவற்றையும்,
மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர,
அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில்
எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர்
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச்
செய்கின்றாரோ,
அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
4:115 .எவனொருவன் நேர்வழி இன்னது என்று
தனக்குத் தெளிவான பின்னரும்,
(அல்லாஹ்வின்)
இத்தூதரை விட்டுப் பிரிந்து,
முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ,
அவனை அவன் செல்லும்;
(தவறான)
வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச்
செய்வோம்;.
அதுவோ,
சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
4:116 .நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை
வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;.
இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு
மன்னிப்பான்;.
எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ,
அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில்
ஆகிவிட்டான்.
4:117. அவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள்
அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்;லை.
இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர,
வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.
4:118. அல்லாஹ் அவனை (ஷைத்தானை)
சபித்தான்.
''உன்
அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான்
நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்"" என்றும்,
4:119.
''இன்னும்
நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்;.
அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்;.
(ஆடு,
மாடு,
ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து
விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும்
அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை
மாற்றும்படியும் ஏவுவேன்"" என்றும் ஷைத்தான்
கூறினான்;.
எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற
நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ,
அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை
அடைந்தவன் ஆவான்.
4:120 .ஷைத்தான் அவர்களுக்கு
வாக்களிக்கிறான்;.
அவர்களுக்கு வீணான எண்ணங்களையும்
உண்டாக்குகிறான்;.
மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு
(எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
4:121 .இத்தகையோருக்கு நரகமே
ஒதுங்குமிடமாகும்;.
அதைவிட்டுத் தப்பிச் செல்ல அவர்கள்,
ஒருவழியையும் காண மாட்டார்கள்.
4:122. மேலும் எவர் ஈமான் கொண்டு
நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம்
சுவனபதிகளில் நுழைய வைப்போம்;.
அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும்.
அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் -
அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இன்னும்
வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள்
யார்?
4:123 .(முஃமின்களே!) மறுமையில் நீங்கள்
விரும்பிய படியோ,
அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ
நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ,
அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்;.
இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு
யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ,
துணை செய்பவனாகவோ காண மாட்டான்.
4:124. ஆகவே,
ஆணாயினும் சரி,
பெண்ணாயினும் சரி,
யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள்
செய்கிறார்களோ,
அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்;
இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட
மாட்டார்கள்.
4:125. மேலும்,
எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு
முற்றிலும் வழிபட்டு,
இப்றாஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின்
பற்றுகிறாரோ,
அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்?
இன்னும் அல்லாஹ் இப்றாஹீமை தன் மெய்யன்பராக
எடுத்துக் கொண்டான்.
4:126 .வானங்களில் உள்ளவையும்,
பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே
சொந்தம்;.
மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும்
சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
4:127. (நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள்
பற்றி (மார்க்கக் கட்டளைக்) கேட்டகிறார்கள்;
அதற்கு நீர்,
''அவர்களைப்
பற்றி அல்லாஹ் உங்களுக்கு தீர்ப்புக் கூறுவான்""
என்று சொல்லும்;.
தவிர,
வேதத்தில் உங்ளுக்கு ஓதிக்காண்பிக்கப்படுவது
அநாதைப் பெண்கள் சம்பந்தமாக அவர்களுக்கு
விதிக்கப்பட்டதை (மஹரை) நீங்கள் அவர்களுக்குக்
கொடுக்காமல் அவர்களை நீங்கள் மணந்து கொள்ள
விரும்பிக் கொண்டிருந்ததைப் பற்றியும்,
குழந்தைகளில் பலவீனமானவர்களைப் பற்றியும்,
அநாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்த
வேண்டும் என்பது பற்றியுமாகும்;.
ஆகவே,
(அவர்களுக்கு)
நன்மையாக நீங்கள் எதைச் செய்தாலும்,
அதை அல்லாஹ் நிச்சயமாக நன்கு அறிந்தவனாக
இருக்கின்றான்.
4:128. ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து
விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான்
என்றோ பயந்தால்,
அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு
முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது
குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும்,
ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு
உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்)
ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து,
(அல்லாஹ்வுக்குப்)
பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ்
நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக
இருக்கின்றான்.
4:129 .(முஃமின்களே!) நீங்கள்
எவ்வளவுதான் விரும்பினாலும்,
மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த
சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்)
முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க
விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்;.
நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக
நடந்து கொள்வீர்களானால்,
நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும்,
மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
4:130 .(சமாதானமாக இணைந்து வாழ முடியாமல்
சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால்,
அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால்,
(ஒருவர்
மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ்
ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான
அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும்
இருக்கின்றான்.
4:131 .வானங்களில் உள்ளவையும்,
பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே
சொந்தம். உங்களுக்குமுன் வேதம்
கொடுக்கப்பட்டவர்களையும்,
உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு
(வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்;.
நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு
நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில்
உள்ளவையும்,
பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே
சொந்தம்;.
மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும்,
புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.
4:132 .வானங்களில் உள்ளவையும்,
பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே
சொந்தம் - இன்னும்,
(உங்கள்
எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக்
கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்.
4:133 .மனிதர்களே! அவன் நாடினால்,
உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு
மனிதர்களைக் கொண்டு வருவான்;
இன்னும்,
அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.
4:134. எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்)
அடைய விரும்பினால்,
''அல்லாஹ்விடம்
இவ்வுலகப்பலனும்,
மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும்
பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.""
4:135 .முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது
நிலைத்திருப்பவர்களாகவும்,
உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது
நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும்
அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும்
இருங்கள்;.
(நீங்கள்
யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள்
செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும்
(உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில்
அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு
அருகதையுடையவன்;.
எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப்
பின்பற்றி விடாதீர்கள்;.
மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது
(சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும்,
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம்
நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
4:136 .முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின்
மீதும்,
அவனுடைய தூதர் மீதும்,
அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின்
மீதும் இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின்
மீதும் ஈமான் கொள்ளுங்கள்;.
எவர் அல்லாஹ்வையும்,
அவனுடைய மலக்குகளையும்,
அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்;
இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ,
அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.
4:137 .நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு,
பின்னர் நிராகரித்து,
பின்னர் ஈமான் கொண்டு,
பின்னர் நிராகரித்து,
பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ,
அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும்
அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும்
இல்லை.
4:138. (நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு
'நிச்சயமாக
நோவினை தரும் வேதனை உண்டு" என்று நன்மாராயங்
கூறுவீராக!
4:139. இவர்கள் முஃமின்களை விட்டும்
காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக
எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே
இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா?
நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.
4:140 .(முஃமின்களே!)
'அல்லாஹ்வின்
வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும்,
பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால்,
அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும்
வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்"
என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது
(கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால்
நீங்களும் அவர்களைப் போன்றவர்களே. நிச்சயமாக
அல்லாஹ் நயவஞ்சகர்களையும்,
காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச்
சேர்த்துவிடுவான்.
4:141 .(இந்நயவஞ்சகர்கள்) உங்களை
எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர்.
அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி
கிடைத்தால்,
(அவர்கள்
உங்களிடம் வந்து)
''நாங்கள்
உங்களுடன் இருக்கவில்லையா?""
என்று கூறுகின்றனர். மாறாக,
காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்)
கிடைத்தால் (அவர்களிடம் சென்று;
அவர்களுடன் சேர்ந்து)
''உங்களை
நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும்
அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா?""
என்று கூறுகின்றனர். எனவே அல்லாஹ் உங்களுக்கும்
(அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில்
தீர்ப்பு வழங்குவான்;.
மெய்யாகவே,
காஃபிர்கள்,
முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு
வழியும் ஆக்கவே மாட்டான்.
4:142 .நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள்
அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன்
அவர்களை வஞ்சித்துவிடுவான். தொழுகைக்கு அவர்கள்
தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே
நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும்
தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக
(நிற்கிறார்கள்). இன்னும்,
மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு
கூர்வதில்லை.
4:143. இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின்
பக்கமுமில்லை,
காஃபிர்களின் பக்கமுமில்லை. இரு
பிரிவினர்களுக்கிடையே தத்தளிதுக்
கொண்டிருக்கிறார்கள்;.
அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ,
அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர்
காணமாட்டீர்.
4:144 .முஃமின்களே! நீங்கள் முஃமின்களை
விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற)
நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்;.
உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை
அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா?
4:145 .நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள்
நரகத்தின் மிகவும் கீழான அடித் தலத்தில்தான்
இருப்பார்கள்;.
அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண
மாட்டீர்.
4:146. யார் மன்னிப்புக் கேட்டு
சீர்திருந்தி,
அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப்
பிடித்து,
தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத்
தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள்
முஃமின்களுடன் இருப்பார்கள்;.
மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான
நற்கூலியை அளிப்பான்.
4:147. நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி
செலுத்திக் கொண்டும்,
(அவன்
மீது) ஈமான் கொண்டும் இருந்தால்;
உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம்
அடையப் போகிறான்?
அல்லாஹ் நன்றியறிவோனாகவும்,
எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
|