|
அத்தியாயம்-46
ஸ_ரத்துல்
அஹ்காஃப்
(மணல்
திட்டுகள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
46:1.
ஹா,
மீம்.
46:2.
இவ்வேதம்,
யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய
அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
46:3.
வானங்களையும்,
பூமியையும் இவையிரண்டிற்கும் இடையே
உள்ளவற்றையும் உண்மையையும்,
ஒரு
குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் நாம்
படைக்கவில்லை ஆனால் நிராகரிப்பவர்களோ,
தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை
செய்யப்பட்டதைப் புறக்கணிப்பவர்களாக
இருக்கிறார்கள்.
46:4. ''நீங்கள்
அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா?
பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது
அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா?
என்பதை எனக்குக் காண்பியுங்கள்!
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்,
இதற்கு,
முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது
(முன்னோர்களின்)
அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ
(உங்கள்
கூற்றுக்கு ஆதாரமாக)
என்னிடம் கொண்டு வாருங்கள்!""
என்று
(நபியே!)
நீர் கூறுவீராக.
46:5.
கியாம நாள்வரை
(அழைத்தாலும்)
தனக்கு பதில் கொடுக்க மாட்டாத
-
அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி
கெட்டவர்கள் யார்?
தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.
46:6.
அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும்
(அந்நாளில்)
இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்;
அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும்
நிராகரித்து
(மறுத்து)
விடுவர்.
46:7.
மேலும்,
நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்
காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை
நிராகரித்து விட்டார்களே அவர்கள்,
''இது
தெளிவான சூனியமே!""
என்றும் கூறுகிறார்கள்.
46:8.
அல்லது,
''இதனை
அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்""
என்று அவர்கள் கூறுகின்றார்களா?
நீர் கூறுவீராக
''நான்
இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால்,
(அல்லாஹ்
அதற்காக தண்டிப்பானே;
அப்போது)
அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும்
(தடுக்க)
நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்.
நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ,
அதை
அவன் நன்கறிகிறவன்;
எனக்கும் எங்களுக்குமிடையே
(அது
பற்றி)
அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்;
அவன் மிகவும் மன்னிப்பவன்;
மிக்க கிருபையுடையவன்""
என்று
(நபியே!
நீர் கூறும்).
46:9. ''(இறை)
தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்;
மேலும் என்னைப் பற்றியோ,
உங்களைப் பற்றியோ,
என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன்,
எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர
(வேறெதையும்)
நான் பின்பற்றுவதில்லை;
தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான்
வேறில்லை""
என்று
(நபியே!)
நீர் கூறும்.
46:10. ''இது
அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின்
மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது
(வர
வேண்டியிருந்தது)
என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும்
போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக்
கொண்டால்
(உங்கள்
நிலை என்னவாகும் என்பதை)
நீங்கள் கவனித்தீர்களா?""
என்று நீர் கூறுவீராக!
நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு
நேர்வழி காட்டமாட்டான்.
46:11.
நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி;
''இது
(குர்ஆன்)
நல்லதாக இருந்தால்,
இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க
மாட்டார்கள்""
என்று கூறினார்கள்.
மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது
''இது
பண்டைக்காலக் கட்டுக் கதை""
எனக் கூறுவார்கள்.
46:12.
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும்
(நேர்வழி
காட்டியாகவும்)
ரஹ்மத்தாகவும் இருந்தது
(குர்ஆனாகிய)
இவ்வேதம்
(முந்தைய
வேதங்களை)
மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்;
இது
அநியாயம் செய்வோரை அச்சமூட்டி
எச்சரிப்பதற்காகவும்,
நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும்
இருக்கிறது.
46:13.
நிச்சயமாக எவர்கள்
''எங்கள்
இறைவன் அல்லாஹ்வே""
என்று கூறி,
பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ
அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும்
மாட்டார்கள்.
46:14.
அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்;
அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக்
கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்.
46:15.
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி
உபதேசம் செய்தோம்;
அவனுடைய தாய்,
வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு
சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்;
(கர்ப்பத்தில்)
அவனைச் சுமப்பதும்;
அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும்
(மொத்தம்)
முப்பதுமாதங்களாகும்.
அவன் வாலிபமாகி,
நாற்பது வயதை அடைந்ததும்;
''இறைவனே!
நீ
என் மீதும்,
என்
பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக,
(அருள்
கொடைகளுக்காக)
நன்றி செலுத்தவும்,
உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல
அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக!
(இதில்
எனக்கு உதவுவதற்காக)
என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக
(நல்லது
செய்பவர்களாக)
சீர்படுத்தியருள்வாயாக!
நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்;
அன்றியும்,
நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக
(உனக்கு
முற்றிலும் வழிப்பட்டவனாக)
இருக்கின்றேன்""
என்று கூறுவான்.
46:16.
சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள்
செய்தவற்றில் அழகான
-
நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு,
இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்;
இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி
உண்மையான வாக்குறுதியாகும்.
46:17.
ஆனால்
(சன்மார்க்கத்தை
தழுவுமாறு கூறிய)
தன்
பெற்றோரை நோக்கி;
''சீச்சீ!
உங்களுக்கு என்ன நேர்ந்தது!
(மரணத்திற்குப்
பின்)
நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று
நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா?
திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்
சென்று விட்டனரே
(அவர்கள்
எழுப்பப்படவில்லையா)!""
என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும்,
(அல்லாஹ்விடம்
பிரார்த்தித்து பிறகு அவனிடம்)
''உனக்கென்ன
கேடு!
நீ
ஈமான் கொள்வாயாக!
நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது""
என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்;
அதற்கவன்
''இவையெல்லாம்
முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை""
என்று கூறுகிறான்.
46:18.
இத்தகையோரின் நிலையோ,
இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள்
மனிதர்கள் கூட்டத்தினரில்
(பாவம்
செய்ததினால்)
எவர்களுக்கு எதிராக
(அல்லாஹ்வின்)
வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ,
அது
போன்றது தான்;
நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.
46:19.
அன்றியும்,
ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத்
தகுந்த பதவிகள்
(மறுமையில்)
உண்டு
-
ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப்
பூரணமாகப் பெறுவதற்காக,
ஆகவே அவர்கள்
(இதில்)
அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
46:20.
அன்றியும்
(நரக)
நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள்
கொண்டுவரப்படும் நாளில்,
''உங்கள்
உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக்
கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம்,
வீண் செலவு செய்து,
(உலக)
இன்பம் தேடினீர்கள்,
''ஆகவே
நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக்
கொண்டும்,
வரம்பு மீறி
(வாழ்ந்து)
கொண்டும் இருந்த காரணத்தால்,
இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக்
கொடுக்கப்படுகிறீர்கள்""
(என்று
அவர்களுக்குக் கூறப்படும்).
46:21.
மேலும்
'ஆது"
(சமூகத்தாரின்)
சகோதரர்
(ஹ_து)
திடமாகவே,
அவருக்கு முன்னரும்,
அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள்
(இறை
தூதர்கள்)
வந்திருக்கிறார்கள்
- (அவர்)
தம்
சமூகத்தாரை,
''அல்லாஹ்வையன்றி
(வேறு
எதனையும்)
நீங்கள் வணங்காதீர்கள்
-
நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு
வரும் என்று நான் பயப்படுகிறேன்""
என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி
எச்சரிக்கை செய்தவை
(நபியே!)
நீர் நினைவு கூர்வீராக.
46:22.
அதற்கு அவர்கள்;
''எங்களுடைய
தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர்
எங்களிடம் வந்தீரா?
நீர் உண்மையாளராக இருந்தால்,
நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ்
வேதனையான)தைக்
கொண்டு வாரும்""
என்று கூறினார்கள்.
46:23.
அதற்கவர்;
''(அது
எப்பொழுது வரும் என்ற)
ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது
மேலும்,
நான் எதைக் கொண்டு உங்களிடம்
அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான்
உங்களுக்குச் சேர்ப்பித்து,
எடுத்துரைக்கின்றேன்
-
எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே
காண்கிறேன்""
என்று கூறினார்.
46:24.
ஆனால் அவர்களோ
(அவர்களுக்கு
அனுப்பப்பட்ட வேதனை)
அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக
வருவதைக் கண்டதும்,
''இது
நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்""
எனக் கூறினார்கள்;
''அப்படியல்ல,
இது
நீங்கள்
(எதற்காக)
அவசரப்பட்டீர்களோ அதுதான்;
(இது
கொடுங்)காற்று
-
இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது
46:25. ''அது
தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப்
பொருட்களையும் அழித்துவிடும்""
(என்று
கூறப்பட்டது).
பொழுது விடிந்த போது,
(அழிக்கப்பட்ட
அவர்களுடைய)
வீடுகளைத் தவிர
(வேறு)
எதுவும் காணப்படவில்லை
-
இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம்
கூலி கொடுக்கிறோம்.
46:26.
உங்களுக்கு
(மக்காவாசிகளுக்கு)
இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ
அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச்
செய்து கொடுத்திருந்தோம்.
மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும்
பார்வைகளையும் இருதயங்களையும் நாம்
கொடுத்திருந்தோம்;
ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை
நிராகரித்துக் கொண்டிருந்த போது,
அவர்களுடைய செவிப் புலனும்,
பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர்
பயனுமளிக்கவில்லை
-
எ(வ்வே)தனைப்
பற்றி அவர்கள் பரிகாசம் செய்து
கொண்டிருந்தார்களோ,
அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
46:27.
அன்றியும்,
உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும்
திடமாக நாம் அழித்திருக்கிறோம்,
அவர்கள்
(நேர்வழிக்கு)
மீளும் பொருட்டு நாம்
(அவர்களுக்குப்)
பல
அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக்
காண்பித்தோம்.
46:28. (அல்லாஹ்விடம்
தங்களை)
நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ்
அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே,
அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை?
ஆனால்,
அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர்
-
அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியதையும்,
இட்டுக் கட்டியவையுமாகும்.
46:29.
மேலும்
(நபியே!)
நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு
ஜின்களில் சிலரை திருப்பியதும்,
அவர்கள் அங்கு வந்த போது,
''மௌனமாக
இருங்கள்""
என்று
(மற்றவர்களுக்குச்)
சொன்னார்கள்;
(ஓதுதல்)
முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை
அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.
46:30. (ஜின்கள்)
கூறினார்கள்;
''எங்களுடைய
சமூகத்தார்களே!
நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம்,
அது
மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது,
அது
தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது.
அது
உண்மையின் பக்கமும்,
நேரான மார்க்கத்தின் பாலும்
(யாவருக்கும்)
'வழி"
காட்டுகின்றது.
46:31. ''எங்கள்
சமூகத்தாரே!
உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு
பதிலளித்து
(அவர்
கூறுவதை ஏற்று)
அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்.
அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு
மன்னிப்பளிப்பான்,
நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப்
பாதுகாப்பான்.
46:32. ''ஆனால்,
எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு
பதிலளிக்க வில்லையோ,
அவர் பூமியில்
(அல்லாஹ்வை)
இயலாமல் ஆக்க முடியாது அவனையன்றி அவரை
பாதுகாப்போர் எவருமில்லை அ(த்தகைய)வர்கள்
பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.""
46:33.
வானங்களையும்,
பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித
சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன்
நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும்
ஆற்றலுடையவன்;
ஆம்!
நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும்
பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
46:34.
மேலும்,
நிராகரிப்பவர்கள்
(நரக)
நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில்
(அவர்களிடம்)
''இது
உண்மையல்லவா?""
(என்று
கேட்கப்படும்;)
அதற்வர்கள்,
''எங்கள்
இறைவன் மீது சத்தியமாக,
உண்மைதான்""
என்று கூறுவார்கள்.
''நீங்கள்
நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை
அனுபவியுங்கள்""
என்று அவன் கூறுவான்.
46:35. ''(நபியே!)
நம்
தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறமையாக
இருந்தது போல்,
நீரும் பொறுமையுடன் இருப்பீராக!
இவர்களுக்காக
(வேதனையை
வரவழைக்க)
அவசரப்படாதீர்!
இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள்
பார்க்கும் நாளில்,
அவர்கள்
(இப்பூமியில்)
ஒரு
நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை
(என்று
எண்ணுவார்கள்.
இது)
தெளிவாக அறிவிக்க வேணிடிதே!
எனவே,
வரம்பு மீறியவர்கள் தவிர
(வேறு
எவரும்)
அழிக்கப்படுவார்களா?
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
|