|
அத்தியாயம்-48
ஸ_ரத்துல்
ஃபத்ஹ்
(வெற்றி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
48:1. (நபியே!)
நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு
வெற்றி அளித்துள்ளோம்
48:2.
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும்,
பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து,
உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து
உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
48:3.
மேலும்,
அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி
செய்வதற்காகவும்
(தெளிவான
இவ்வெற்றியை அவன் அளித்தான்)
48:4.
அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை
அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின்
இதயங்களில்,
அவன் தாம் அமைதியும்
(ஆறுதலும்)
அளித்தான்;
அன்றியும் வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள்
(எல்லாம்)
அல்லாஹ்வுக்கே சொந்தம்;
மேலும்,
அல்லாஹ் நன்கறிந்தவன்,
ஞானம் மிக்னோன்.
48:5.
முஃமினான ஆண்களையும்,
முஃமினான பெண்களையும் சுவர்க்கங்களின்
பிரவேசிக்கச் செய்வதற்காக
(இவ்வாறு
அருளினான்)
அவற்றின் கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும்;
அவர்கள் அவற்றில் என்றென்றும்
தங்கியிருப்பார்கள்;
அவர்களின் பாவங்களையும் அவர்களை விட்டு நீக்கி
விடுவான்
-
இதுவே அல்லாஹ்விடத்தில் மகத்தான் வெற்றியாகும்.
48:6.
அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும்
முனாஃபிக்கான ஆண்களையும்,
முனாஃபிக்கான பெண்களையும்,
இணைவைத்து வணங்கும் ஆண்களையும்,
இணைவைத்து வணங்கும் பெண்களையும்,
(அல்லாஹ்)
வேதனை செய்வான்.
(அவ்வேதணையின்)
கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது
இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்;
அவர்களைச் சபித்தும் விட்டான்;
அவர்களுக்காக நரகத்தையும் சித்தம்
செய்திருக்கின்றான்
- (அதுதான்)
செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.
48:7.
அன்றியும் வானங்களிலும்,
பூமியிலுமுள்ள படைகள்
(எல்லாம்)
அல்லாஹ்வுக்கு சொந்தம்;
மேலும்,
அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்;
ஞானம் மிக்கோன்.
48:8.
நிச்சயமாக நாம் உம்மை சாட்சி சொல்பவராகவும்,
நன்மாராயம் கூறுபவராகவும்,
அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்,
அனுப்பியிருக்கிறோம்.
48:9. (ஆகவே,
முஃமின்களே!)
நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்
மீதும் ஈமான் கொண்டு,
அவனுக்கு
(சன்மார்க்கத்தில்)
உதவி,
அவனைச் சங்கை செய்து,
காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து
வருவதற்காக(வே
தூதரை அனுப்பினோம்).
48:10.
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி)
செய்கிறார்களோ,
அவர்கள் அல்லாஹ்விடமே வைஅத்(வாக்குறுதி)
செய்கின்றனர்
-
அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல்
இருக்கிறது ஆகவே,
எவன்
(அவ்வாக்குறுதியை)
முறித்து விடுகிறானோ,
நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே
(அதை)
முறிக்கிறான்.
எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை
நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான
நற்கூலியை விரைவில் வழங்குவான்.
48:11. (நபியே!
போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்)
பின்தங்கி விட்ட நாட்டுப் புறத்து அரபிகள்;
''எங்களுடைய
சொத்துகளும்,
எங்கள் குடும்பங்களும்
(உங்களுடன்
வராது)
எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கி விட்டன எனவே,
நீங்கள் எங்களுக்காக மன்னிப்புக் கோருவீர்களாக!""
எனக் கூறுவர்.
அவர்கள் தங்கள் இதயங்களில் இல்லாததைத் தம்
நாவுகளினால் கூறுகிறார்கள்;
''அல்லாஹ்
உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன்
உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும்,
அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த்
தடுக்கக் கூடிய)
அதிகாரம் பெற்றவர் யார்!
அப்படியல்ல!
அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக
இருக்கிறான்""
எனக் கூறும்.
48:12. ''(நீங்கள்
கூறுவது போல்)
அல்ல
(அல்லாஹ்வின்)
தூதரும்,
முஃமின்களும்,
தங்கள் குடம்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப
மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக்
கொண்டிருந்தீர்கள்;
இதுவே உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது;
ஆதலால் நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக்
கொண்டிருந்தீர்கள்;
அதனால் நீங்கள் நாசமடையும் சமூகத்தினர்களாகி
விட்டீர்கள்.""
48:13.
அன்றியும் எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்
மீதும் ஈமான் கொள்ளவில்லையோ
-
நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம் கொழுந்து
விட்டெரியும்
(நரக)
நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
48:14.
மேலும் வானங்களிடையவும்,
பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே!
தான் விரும்பியவர்களை அவன் மன்னிக்கிறான்;
தான் விரும்பியவர்களை அவன் வேதனை செய்கிறான்
-
அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்,
மிக்க கிருபையுடையவன்.
48:15.
போர்க்களப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக
நீங்கள் சென்றீர்களாயின்,
(போருக்கு
உம்முடன் சேர்ந்து வராமல்)
பின் தங்கி விட்டவர்கள்,
''நாங்களும்
உங்களைப்
பின்பற்றிவர அனுமதி கொடுங்கள்""
என்று கூறுவார்கள்;
அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மாற்றிவிட
நாடுகிறார்கள்;
''நீங்கள்
எங்களைப் பின்பற்றி வரவே வேண்டாம்;
இவ்வாறே அல்லாஹ் முன்னர் கூறியிருக்கின்றான்""
என்று
(நபியே!
அவர்களிடம்)
நீர் சொல்லி விடுவீராக ஆனால்,
அவர்கள்;
''அல்ல!
நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்""
எனக் கூறுவார்கள்;
அப்படியல்ல!
அவர்கள் மிக சொற்பமாகவே அன்றி
(பெரும்பாலானதை)
அறிந்துணராமலே இருக்கிறார்கள்.
48:16.
பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்;
''நீங்கள்
சீக்கரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு
சமூகத்தாரிடம்
(அவர்களை
எதிர்த்துப் போரிட)
அழைக்கப்படுவீர்கள்,
அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்;
அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும்,
அப்போது நீங்கள் வழிப்பட்டு நடப்பீர்களானால்,
அல்லஹ் உங்களுக்கு அழிகிய நற்கூலியைக்
கொடுப்பான்;
ஆனால் இதற்கு முன் நீங்கள்
(போரிடாமல்)
பின்னடைந்தது போல்
(இப்பொழுதும்)
நீங்கள் பின்வாங்குவீர்களாயின்,
அவன் உங்களை நோவினை தரும் வேதனையாக வேதனை
செய்வான்""
என்று
(நபியே!)
நீர் கூறும்.
48:17. (ஆயினும்
போருக்குச் செல்லாதது பற்றி)
அந்தகர் மீதும் குற்றம் இல்லை முடவர் மீதும்
குற்றம் இல்லை நோயாளி மீதும் குற்றம் இல்லை
-
அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும்,
அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ,
அவரை
(அல்லாஹ்)
சுவர்க்கங்களில் விரவேசிக்கச் செய்வான்;
அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;
ஆனால் எவன் பின் வாங்குகிறானோ,
அவனை
(அல்லாஹ்)
நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்.
48:18.
முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம்
வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ்
அவர்களைப் பொருந்தி
(ஏற்றுக்)
கொண்டான்;
அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து,
அவர்கள் மீது
(சாந்தியையும்)
அமைதியை(யும்)
இறக்கியருளி,
அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.
48:19.
இன்னும் ஏராளமான போர்ப்பொருள்களையும் அவர்கள்
கைப்பற்றும்படிச் செய்தான்;
அல்லாஹ் யாவரையும் மிகைப்பனாகவும்,
ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
48:20.
ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ்
உங்களுக்கு வாக்களிக்கிறான்;
அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்;
இதை
உங்களுக்கு,
துரிதமாக அளித்து,
கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும்
தடுத்துக் கொண்டான்.
(இதை)
முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக
இருப்பதற்காகவும்,
உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும்
(இவ்வாறு
அருள் புரிந்தான்).
48:21.
மற்றொரு
- (வெற்றியும்)
இருக்கிறது அவற்றுக்கு நீங்கள்
(இன்னும்)
சக்தி பெறவில்லை ஆயினும் அல்லாஹ் அவற்றை
திட்டமாக சூழ்ந்தறிந்திருக்கின்றான்.
அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக
இருக்கிறான்.
48:22.
நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர்
செய்திருப்பார்களாயின்,
அவர்கள் புறங்காட்டிப் பின் வாங்கியிருப்பார்கள்;
அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ,
உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்.
48:23.
இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸ{ன்னத்து
(நடைமுறை)
ஆகும்,
இதற்கு முன்பும்
(இவ்வாறு)
நடந்திருக்கிறது
-
ஆகவே அல்லாஹ்வுடைய ஸ{ன்னத்தில்
- (நடைமுறையில்)
நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.
48:24.
இன்னும்,
அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த
பிறகு,
மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும்,
உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக்
கொண்டான்.
அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு
பார்ப்பவனாக இருக்கின்றான்.
48:25. ''மஸ்ஜிதுல்
ஹராமை விட்டு உங்களையும்
(தடுத்து,)
குர்பானி பிராணியை அதற்குரிய இடத்திற்கு
செல்லமுடியாத படியும் தடுத்து காஃபிர்கள்
அவர்கள்தான்.
(மக்காவில்
ஈமானை மறைத்துக் கொண்ட)
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும்
இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து
கொள்ளாமலேயே
(உங்கள்
கால்களால்)
அவர்களை மிதித்திருப்பீர்கள்;
(அவ்வாறே)
அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம்
உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும்.
தான் நாடியவர்களை தனது அருளில் அல்லாஹ் நுழையச்
செய்வதற்காகவே
(அவன்
மக்காவில் பிரவேசிக்க உங்களை அனுமதிக்கவில்லை
அங்கு இருக்கும்)
முஃமின்கள்
(காஃபிர்களை
விட்டும்)
விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை
(மட்டும்)
கடும் வேதனையாக வேதனை செய்திருப்போம்.
48:26. (காஃபிராக)
நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள்
வைராக்கியத்தை
-
முட்டாள்தனமான வைராக்கியத்தை
-
தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம்
அல்லாஹ் தன் தூதர் மீதும்,
முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள்
செய்து,
அவர்களுக்கு
(பயபக்தியூட்டும்)
தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை
பெறச் செய்தான்;
அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும்,
அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள்
-
அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்தவனாக
இருக்கின்றான்.
48:27.
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு
(அவர்
கண்ட)
கனவை உண்மையாக்கி விட்டான்;
அல்லாஹ் விரும்பினால்,
நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில்
அச்சந்தீர்ந்தவர்களாகவும்,
உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும்
(உரோமம்)
கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள்
(அப்போதும்
எவருக்கும்)
நீங்கள் பயப்பட மாட்டீர்கள்,
ஆகவே,
நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான்
- (அதன்
பின்னர்)
இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும்
(உங்களுக்கு)
ஆக்கிக் கொடுத்தான்,
48:28.
அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும்,
சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான்;
சகல
மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக
(இதற்கு)
அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது.
48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே
இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள்,
காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே
இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும்,
ஸ{ஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து
(அவன்) அருளையும் (அவனுடைய)
திருப்பொருத்தத்தையும் விரும்பி
வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்;
அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில்
(நெற்றியில்) ஸ{ஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவெ
தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும்,
இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப்
போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை
பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி,
பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும்
விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது
நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு
நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால்
அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல)
அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ்
மன்னிப்பையும், மகத்தான கூலியையும்
வாக்களிக்கின்றான்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
|