|
அத்தியாயம்-5
சூரத்துல்
மாயிதா
(உணவு
நிறைந்த
மரவை)
அளவற்ற
அருளாளனும்
நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
5:1.
முஃமின்களே!
(நீங்கள்
செய்து
கொண்ட)
உடன்படிக்கைகளை
(முழுமையாக)
நிறைவேற்றுங்கள்;.
உங்கள்
மீது
ஓதிக்காட்டி
இருப்பவற்றைத்
தவிர
மற்றைய
நாற்கால்
பிராணிகள்
உங்களுக்கு(உணவிற்காக)ஆகுமாக்கப்பட்டுள்ளன.
ஆனால்
நீங்கள்
இஹ்ராம்
அணிந்திருக்கும்
சமயத்தில்
(அவற்றை)
வேட்டையாடுவது
(உங்களுக்குத்)
தடுக்கப்பட்டுள்ளது.
நிச்சயமாக
அல்லாஹ்
தான்
நாடியதைக்
கட்டளையிடுகிறான்.
5:2.
முஃமின்களே!
(நீங்கள்
இஹ்ராம்
கட்டியிருக்கும்
சமயத்தில்
உங்களுக்கு
ஏற்படுத்தப்பட்ட)
அல்லாஹ்வின
மார்க்க
அடையாளங்களையும்,
சிறப்பான
மாதங்களையும்,
குர்பானிகளையும்,
குர்பானிக்காக
அடையாளம்
கட்டப்பெற்றவையும்,
தங்களுடைய
இறைவனின்
அருளையும்
திருப்பொருத்தத்தையும்
நாடி
கண்ணியமான
(அவனுடைய)
ஆலயத்தை
நாடிச்
செல்வோரையும்
(தாக்குவதையோ,
அவமதிப்பதையோ)
நீங்கள்
ஆகுமாக்கிக்
கொள்ளாதீர்கள்;.
நீங்கள்
இஹ்ராமைக்
களைந்து
விட்டால்
(அனுமதிக்கப்பட்டவற்றை)
நீங்கள்
வேட்டையாடலாம்;.
மேலும்
புனித
மஸ்ஜிதை
(கஃபத்துல்லாஹ்வை)
விட்டும்
உங்களைத்
தடுத்த
கூட்டத்தினர்
மீதுள்ள
வெறுப்பானது,
நீங்கள்
வரம்பு
மீறுமாறு
உங்களைத்
தூண்டி
விட
வேண்டாம்;.
இன்னும்
நன்மையிலும்;
பயபக்தியிலும்
நீங்கள்
ஒருவருக்கொருவர்
உதவி
செய்து
கொள்ளுங்கள்;.
பாவத்திலும்,
பகைமையிலும்
நீங்கள்
ஒருவருக்கொருவர்
உதவி
செய்து
கொள்ள
வேண்டாம்;.
அல்லாஹ்வுக்கே
பயப்படுங்கள்
-
நிச்சயமாக
அல்லாஹ்
கடுமையாக
தண்டிப்பவன்.
5:3. (தானகச்)
செத்தது,
இரத்தம்,
பன்றியின்
இறைச்சி,
அல்லாஹ்
அல்லாததின்
பெயர்
அதன்
மீது
கூறப்பட்ட
(அறுக்கப்பட்;ட)தும்,
கழுத்து
நெறித்துச்
செத்ததும்,
அடிபட்டுச்
செத்ததும்,
கீNழு
விழுந்து
செத்ததும்,
கொம்பால்
முட்டப்
பட்டுச்
செத்ததும்,
(கரடி,
புலி
போன்ற)
விலங்குகள்
கடித்(துச்
செத்)தவையும்
உங்கள்
மீது
ஹராமாக்கப்
பட்டிருக்கின்றன.
(அனுமதிக்கப்பட்டவற்றில்)
எதை
நீங்கள்
(உயிரோடு
பார்த்து,
முறைப்படி)
அறுத்தீர்களோ
அதைத்
தவிர
(அதை
உண்ணலாம்.
அன்றியும்
பிற
வணக்கம்
செய்வதற்காகச்)
சின்னங்கள்
வைக்கப்
பெற்ற
இடங்களில்
அறுக்கப்பட்டவையும்;,
அம்புகள்
மூலம்
நீங்கள்
குறி
கேட்பதும்
(உங்களுக்கு
விலக்கப்பட்டுள்ளன)
-
இவையாவும்
(பெரும்)
பாவங்களாகும்;.
இன்றைய
தினம்
காஃபிர்கள்
உங்களுடைய
மார்க்கத்தை
(அழித்து
விடலாம்
என்பதை)ப்
பற்றிய
நம்பிக்கையை
இழந்து
விட்டார்கள்;.
எனவே
நீங்கள்
அவர்களுக்கு
அஞ்சாதீர்கள்;
எனக்கே
அஞ்சி
நடப்பீர்களாக.
இன்றைய
தினம்
உங்களுக்காக
உங்கள்
மார்க்கத்தை
பரிபூர்ணமாக்கி
விட்டேன்;.
மேலும்
நான்
உங்கள்
மீது
என்
அருட்கொடையைப்
பூர்த்தியாக்கி
விட்டேன்;.
இன்னும்
உங்களுக்காக
நான்
இஸ்லாம்
மார்க்கத்தையே
(இசைவானதாகத்)
தேர்ந்தெடுத்துள்ளேன்;.
ஆனால்
உங்களில்
எவரேனும்
பாவம்
செய்யும்
நாட்டமின்றி,
பசிக்
கொடுமையினால்
நிர்ப்பந்திக்கப்பட்டு
(மேலே
கூறப்பட்ட
விலக்கப்பட்டவற்றைப்
புசித்து)
விட்டால்
(அது
குற்றமாகாது).
ஏனெனில்
நிச்சயமாக
அல்லாஹ்
மிகவும்
மன்னிப்பவனாகவும்,
கருணை
மிக்கோனாகவும்
இருக்கின்றான்.
5:4. (நபியே!)
அவர்கள்
(உண்பதற்குத்
)
தங்களுக்கு
ஹலாலான
(அனுமதிக்கப்பட்ட)வை
எவை
என்று
உம்மிடம்
கேட்கிறார்கள்;.
நீர்
கூறும்;
உங்களுக்கு
ஹலாலானவை,
சுத்தமான
நல்ல
பொருள்களும்,
அல்லாஹ்
உங்களுக்குக்
கற்பித்திருக்கிறபடி
வேட்டையாடும்
பிராணி,
பறவைகளுக்கு
நீங்கள்
பயிற்சியளித்து
அவை
வேட்டையாடி
நீங்கள்
பெற்றவையும்
புசியுங்கள்;.
எனினும்
நீங்கள்
(வேட்டைக்கு
விடும்போது)
அதன்மீது
அல்லாஹ்வின்
பெயரைக்
கூறி
விடுங்கள்;.
அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள்.
நிச்சயமாக
அல்லாஹ்
கணக்கெடுப்பதில்
மிகவும்
விரைவானவன்.
5:5.
இன்றைய
தினம்
உங்களுக்கு
(உண்ண)
எல்லா
நல்ல
தூய
பொருட்களும்
ஹலாலாக்கப்
பட்டுள்ளன.
வேதம்
கொடுக்கப்பட்டோரின்
உணவும்
உங்களுக்கு
ஹலாலானதே.
உங்களுடைய
உணவும்
அவர்களுக்கு
(சாப்பிட)
ஆகுமானதே,
முஃமின்களான
கற்புடைய
பெண்களும்,
உங்களுக்கு
முன்னர்
வேதம்
அளிக்கப்பட்டவர்களிலுள்ள
கற்புடைய
பெண்களும்
விலைப்
பெண்டிராகவோ,
ஆசை
நாயகிகளாகவோ
வைத்துக்
கொள்ளாது,
அவர்களுக்குரிய
மஹரை
அவர்களுக்கு
அளித்து,
மண
முடித்துக்
கொள்வது
உங்களுக்கு
அனுமதிக்கப்
பட்டுள்ளது.
மேலும்,
எவர்
ஈமானை
நிராகரிக்கிறாரோ,
அவருடைய
அமல்
(செயல்)
அழிந்து
போகும்
-
மேலும்
அவர்
மறுமையில
நஷ்டமடைந்தோரில்
ஒருவராகவே
இருப்பார்.
5:6.
முஃமின்களே!
நீங்கள்
தொழுகைக்குத்
தயாராகும்போது,
(முன்னதாக)
உங்கள்
முகங்களையும்,
முழங்கைகள்
வரை
உங்கள்
இரு
கைகளையும்,
கழுவிக்
கொள்ளுங்கள்;.
உங்களுடைய
தலைகளை
(ஈரக்கையால்)
தடவி
(மஸஹ{
செய்து)
கொள்ளுங்கள்;.
உங்கள்
கால்களை
இரு
கணுக்கால்
வரை(க்
கழுவிக்
கொள்ளுங்கள்)
-
நீங்கள்
பெருந்தொடக்குடையோராக
(குளிக்கக்
கடமைப்
பட்டோராக)
இருந்தால்
குளித்து(த்
தேகம்
முழுவதையும்
சுத்தம்
செய்து)க்
கொள்ளுங்கள்;.
தவிர
நீங்கள
நோயாளிகளாகவோ,
அல்லது
பிரயாணத்திலோ
இருந்தால்,
அல்லது
உங்களில்
எவரும்
மல
ஜலம்
கழித்து
வந்தாலும்,
அல்லது
நீங்கள்
பெண்களைத்
தீண்டி
(உடல்
உறவு
கொண்டி)ருந்தாலும்
(உங்களைச்
சுத்தப்படுத்திக்
கொள்ள)
உங்களுக்குத்
தண்ணீர்
கிடைக்காவிட்டால்
(தயம்மும்
செய்து
கொள்ளுங்கள்;.
அதாவது)
சுத்தமான
மண்ணைக்
(கையினால்
தடவிக்)
கொண்டு
அவைகளால்
உங்கள்
முகங்களையும்,
உங்களுடைய
கைகளையும்
தடவிக்
கொள்ளுங்கள்;.
அல்லாஹ்
உங்களை
வருத்தக்
கூடிய
எந்த
சிரமத்தையும்
கொடுக்க
விரும்பவில்லை
-
ஆனால்
அவன்
உங்களைத்
தூய்மைப்
படுத்தவும்;
இன்னும்
நீங்கள்
அவனுக்கு
நன்றி
செலுத்தும்
பொருட்டு,
தனது
அருட்கொடையை
உங்கள்
மீது
முழுமையாக்கவும்
விரும்புகிறான்.
5:7.
மேலும்,
உங்கள்
மீதுள்ள
அல்லாஹ்வின்
அருளையும்,
அவன்
உங்களிடம்
வாக்குறுதி
வாங்கிய
பொழுது
நீங்கள்
அதை
உறுதிப்படுத்தி,
''நாங்கள்
செவி
மடுத்தோம்,
நாங்கள்
(உனக்கு)
வழிப்பட்டோம்""
என்று
நீங்கள்
கூறியதையும்
நினைவு
கூறுங்கள்;.
அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள்;
நிச்சயமாக
அல்லாஹ்
(உங்கள்)
இருதயங்களிலுள்ள
(இரகசியங்களை)
யெல்லாம்
நன்கறிந்தவனாக
இருக்கின்றான்.
5:8.
முஃமின்களே!
நியாயத்தை
நிலை
நாட்டுவதற்காக
அல்லாஹ்வுக்கு
நீங்கள்
உறுதியான
சாட்சியாக
இருங்கள்,
எந்த
ஒரு
கூட்டத்தார்
மீதும்
நீங்கள்
கொண்டுள்ள
வெறுப்பு
நீதி
செய்யாமலிருக்க
உங்களைத்
தூண்ட
வேண்டாம்.
நீதி
செய்யுங்கள்;.
இதுவே
(தக்வாவுக்கு)
-
பயபக்திக்கு
மிக
நெருக்கமாகும்;.
அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள்;
நிச்சயமாக
அல்லாஹ்
நீங்கள்
செய்பவற்றை(யெல்லாம்
நன்கு)
அறிந்தவனாக
இருக்கின்றான்.
5:9.
ஈமான்
கொண்டு.
நல்ல
அமல்கள்
செய்வோருக்கு,
மன்னிப்பையும்,
மகத்தான
(நற்)கூலியையும்
அல்லாஹ்
வாக்களித்துள்ளான்.
5:10.
எவர்
நிராகரித்து,
நம்
திருவசனங்களையும்
மறுக்கிறார்களோ,
அவர்கள்
நரகவாசிகள்
ஆவார்கள்.
5:11.
முஃமின்களே!
ஒரு
கூட்டத்தார்
தம்
கைகளை
உங்களிடம்
நீட்(டி
உங்களைக்
கொன்று
வி)டத்
தீர்மானித்த
போது,
உங்களை
விட்டு
அவர்கள்
கைகளை
தடுத்து
அல்லாஹ்
உங்களுக்குப்
புரிந்த
அருளை
நினைவு
கூறுங்கள்
-
ஆகவே,
அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள்;.
இன்னும்
அல்லாஹ்வின்
மீதே
முஃமின்கள்
(முழுமையாக)
நம்பிக்கை
வைக்கட்டும்.
5:12.
நிச்சயமாக
அல்லாஹ்
இஸ்ராயீலின்
சந்ததியினர்
இடத்தில்
உறுதி
மொழி
வாங்கினான்;.
மேலும்
அவர்களிலிருந்து
பன்னிரண்டு
தலைவர்களை
அனுப்பியுள்ளோம்.
இன்னும்
(உறுதி
மொழி
வாங்கியபோது)
அல்லாஹ்
கூறினான்;
''நிச்சயமாக
நான்
உங்களுடனேயே
இருக்கின்றேன்;
நீங்கள்
தொழுகையை
நிலைநிறுத்தி,
ஜக்காத்தும்
கொடுத்து,
என்
தூதர்களை
விசுவாசித்து,
அவர்களுக்கு
உதவியும்
புரிந்து,
அல்லாஹ்வுக்காக
அழகிய
கடனும்
கொடுப்பீர்களானால்
நிச்சயமாக
நான்
உங்கள்
பாவங்களை
மன்னித்து
சதா
நீரருவிகள்
தாழாலே
ஓடிக்கொண்டிருக்கும்
சுவனபதிகளில்
உங்களை
நுழைய
வைப்பேன்;.
எனவே
இதற்குப்
பின்னரும்,
உங்களில்
எவரேனும்
(இம்மார்க்கத்தை)
நிராகரிப்பின்
நிச்சயமாக
அவர்
நேரான
வழியிலிருந்து
தவறிவிட்டார்.""
5:13.
அப்பால்,
அவர்கள்
தம்
உடன்படிக்கையை
முறித்து
விட்டதால்
நாம்
அவர்களைச்
சபித்தோம்;.
அவர்களுடைய
இருதயங்களை
இறுகச்
செய்தோம்;.
(இறை)வசனங்களை
அதற்குரிய
(சரியான)
இடங்களிலிருந்து
அவர்கள்
மாற்றுகிறார்கள்.
அவர்களுக்கு
வழங்கப்பட்டிருந்த
போதனையின்
(பெரும்)
பகுதியை
மறந்து
விட்டார்கள்;.
ஆகவே
அவர்களில்
சிலரைத்
தவிர
அவர்களில்
பெரும்பாலோரின்
மோசடியைப்
பற்றி
(நபியே!)
நீர்
தவறாமல்
கண்டு
கொண்டே
இருப்பீர்.
எனவே
நீர்
அவர்களை
மன்னத்துப்
புறக்கணித்து
விடுவீராக.
மெய்யாகவே
நன்மை
செய்வோரை
அல்லாஹ்
நேசிக்கிறான்.
5:14.
அன்றியும்
எவர்கள்
தங்களை,
''நிச்சயமாக
நாங்கள்
கிறிஸ்தவர்கள்""
என்று
கூறிக்கொள்கிறார்களோ
அவர்களிடமிருந்தும்
நாம்
உறுதிமொழி
வாங்கினோம்;.
ஆனால்
அவர்களும்
அவர்களுக்கு
வழங்கப்பட்டிருந்த
போதனையின்
(பெரும்)
பகுதியை
மறந்து
விட்டார்கள்;.
ஆகவே,
இறுதி
நாள்
வரை
அவர்களிடையே
பகைமையும்,
வெறுப்பும்
நிலைக்கச்
செய்தோம்;.
இன்னும்,
அவர்கள்
செய்து
கொண்டிருந்தவை
பற்றி
அல்லாஹ்
அவர்களுக்கு
எடுத்துக்
காட்டுவான்.
5:15.
வேதமுடையவர்களே!
மெய்யாகவே
உஙகளிடம்
நம்முடைய
தூதர்
வந்திருக்கின்றார்.
வேதத்திலிருந்து
நீங்கள்
மறைத்துக்
கொண்டிருப்பவற்றில்
பல
விஷயங்களை
அவர்
உங்களுக்கு
விளக்கிக்
காட்டுவார்.
இன்னும்,
(இப்பொழுது
தேவையில்லாத)
அநேகத்தை
விட்டுவிடுவார்.
நிச்சயமாக
அல்லாஹ்விடமிருந்து
பேரொளியும்,
தெளிவுமுள்ள
(திருக்
குர்ஆன்
என்னும்)
வேதமும்
உங்களிடம்
வந்திருக்கின்றது.
5:16.
அல்லாஹ்
இதைக்
கொண்டு
அவனது
திருப்பொருத்தத்தைப்
பின்பற்றக்
கூடிய
அனைவரையும்
பாதுகாப்புள்ள
நேர்
வழிகளில்
செலுத்துகிறான்;.
இன்னும்
அவர்களை
இருள்களிலிருந்து
வெளியேற்றி,
தன்
நாட்டப்படி
ஒளியின்
பக்கம்
செலுத்துகிறான்;.
மேலும்
அவர்களை
நேரான
வழியில்
செலுத்துகிறான்.
5:17.
திடமாக
எவர்
மர்யமுடைய
குமாரர்
மஸீஹ்
(ஈஸா)
தான்
அல்லாஹ்
என்று
கூறுகிறாரோ,
அத்ததையோர்
நிச்சயமாக
நிராகரிப்போர்
ஆகிவிட்டனர்.
''மர்யமுடைய
குமாரர்
மஸீஹையும்
அவருமடைய
தாயாரையும்
இன்னும்
பூமியிலுள்ள
அனைவரையும்
அல்லாஹ்
அழித்துவிட
நாடினால்,
(அதிலிருந்து
அவர்களைக்
காக்க)
எவர்
சிறிதளவேனும்
சக்தியோ
அதிகாரமோ
பெற்றிருக்கிறார்""
என்று
(நபியே!)
நீர்
கேளும்;.
வானங்களிலும்,
பூமியிலும்,
அவற்றிற்கு
இடையேயும்
உள்ள
(பொருட்கள்
அனைத்)தின்
மீதுமுள்ள
ஆட்சி
அல்லாஹ்வுக்கே
சொந்தம்;.
அவன்
நாடியதைப்
படைக்கிறான்;.
இன்னும்
அல்லாஹ்
எல்லாவற்றின்
மீதும்
ஆற்றலுடையவனாக
இருக்கின்றான்.
5:18.
யூதர்களும்,
கிறிஸதவர்களும்
''நாங்கள்
அல்லாஹ்வின்
குமாரர்கள்
என்றும்"
அவனுடைய
நேசர்கள்""
என்றும்
கூறுகிறார்கள்.
அப்படியாயின்
உங்கள்
பாவங்களுக்காக
உங்களை
அவன்
ஏன்
வேதனைப்
படுத்துகிறான்.
அப்படியல்ல!
''நீங்கள்
அவன்
படைத்தவற்றைச்
சேர்ந்த
மனிதர்கள்தாம்""
என்று
(நபியே!)
நீர்
கூறும்.
தான்
நாடியவர்களை
அவன்
மன்னிக்கிறான்.
தான்
நாடியவர்களைத்
தண்டிக்கவும்
செய்கிறான்.
இன்னும்
வானங்களிலும்,
பூமிலும்,
அவற்றிற்கிடையேயும்
இருக்கும்
எல்லாவற்றின்
மீதுமுள்ள
ஆட்சி
அவனுக்கே
உரியது.
மேலும்,
அவன்
பக்கமே
(எல்லோரும்)
மீள
வேண்டியிருக்கின்றது.
5:19.
வேதமுடையவர்களே!
நிச்சயமாக
(ஈஸாவுக்குப்பின்
இதுவரையிலும்)
தூதர்கள்
வராது
இடைப்பட்டிருந்த
காலத்தில்,
''நன்மாராயங்
கூறுபவரும்,
அச்சமூட்டி
எச்சரிப்பவரும்
ஆகிய
எவரும்
எங்களிடம்
வரவே
இல்லையே""
என
நீங்கள்
கூறாதிருக்கும்
பொருட்டு,
இப்பொழுது
உங்களுக்கு
(மார்க்கத்தைத்)
தெளிவாக
எடுத்துக்கூற
நம்
தூதர்
உங்களிடம்
வந்துள்ளார்.
எனவே
நன்மாராயம்
கூறுபவரும்,
அச்சமூட்டி
எச்சரிப்பவரும்
உங்களிடம்
நிச்சயமாக
வந்து
விட்டார்.
இன்னும்;
அல்லாஹ்
எல்லாப்
பொருட்கள்
மீதும்
வல்லமையுடையவனாக
இருக்கின்றான்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
|