|
அத்தியாயம்-6
சூரத்துல்
அன்ஆம்
(கால்நடைகள்)
அளவற்ற
அருளாளனும்
நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
6:1.
எல்லாப்
புகழும்
அல்லாஹ்வுக்கே
உரியது.
அவனே
வானங்களையும்,
பூமியையும்
படைத்தான்;,
இருள்களையும்,
ஒளியையும்
அவனே
உண்டாக்கினான்;,
அப்படியிருந்தும்
நிராகரிப்பவர்கள்
தம்
இறைவனுக்கு(ப்
பிற
பொருட்களைச்)
சமமாக்குகின்றனர்.
6:2.
அவன்தான்,
உங்களைக்
களிமண்ணிலிருந்து
படைத்துப்
பின்னர்
(உங்களுக்கு
ஒரு
குறிப்பிட்ட)
தவணையையும்
ஏற்படுத்தியுள்ளான்;,
இன்னும்,
(உங்களைக்
கேள்விகணக்கிற்கு
எழுப்புவதற்காகக்)
குறிக்கப்பட்ட
தவணையும்
அவனிடமே
உள்ளது.
அப்படியிருந்தும்
நீங்கள்
சந்தேகப்படுகிறீர்கள்.
6:3.
இன்னும்
வானங்களிலும்
பூமியிலும்
அவனே
(ஏக
நாயனாகிய)
அல்லாஹ்;
உங்கள்
இரகசியத்தையும்,
உங்கள்
பரகசியத்தையும்
அவன்
அறிவான்;
இன்னும்
நீங்கள்
(நன்மையோ
தீமையோ)
சம்பாதிப்பதை
எல்லாம்
அவன்
அறிவான்.
6:4. (அவ்வாறு
இருந்தும்,)
தங்கள்
இறைவனுடைய
திருவசனங்களிலிருந்து
எந்த
வசனம்
அவர்களிடம்
வந்தபோதிலும்
அதை
அவர்கள்
புறக்கணிக்கவே
செய்கின்றனர்.
6:5.
எனவே,
சத்திய
(வேத)ம்
அவர்களிடம்
வந்திருக்கும்
போதும்
அதனைப்
பொய்ப்பிக்கின்றனர்;
ஆனால்,
எந்த
விஷயங்களைப்
(பொய்யென்று)
பரிகசித்துக்
கொண்டிருக்கிறார்களோ,
அவை
அவர்களுக்கு
வந்தே
தீரும்.
6:6.
அவர்களுக்கு
முன்னர்
நாம்
எத்தனையோ
தலைமுறையினரை
அழித்திருக்கிறோம்
என்பதை
அவர்கள்
பார்க்கவில்லையா?
பூமியில்
நாம்
உங்களுக்கு
செய்து
தராத
வசதிகளையெல்லாம்
அவர்களுக்குச்
செய்து
கொடுத்திருந்தோம்;
அவர்கள்
மீது
நாம்
வானம்
தாரை
தரையாக
மழை
பெய்யுமாறு
செய்து,
அவர்களுக்குக்
கீழே
ஆறுகள்
செழித்தோடும்படிச்
செய்தோம்;
பிறகு
அவர்களின்
பாவங்களின்
காரணத்தால்
அவர்களை
அழித்து
விட்டோம்;
அவர்களுக்குப்
பின்
வேறு
தலைமுறைகளை
உண்டாக்கினோம்.
6:7.
காகிதத்தில்
(எழுதப்பட்ட)
ஒரு
வேதத்தையே
நாம்
உம்
மீது
இறக்கி
வைத்து,
அதனை
அவர்கள்
தம்
கைகளால்
தொட்டுப்
பார்த்தபோதிலும்,
''இது
பகிரங்கமான
சூனியத்தைத்தவிர
வேறில்லை
என்று
அந்நிராகரிப்போர்
நிச்சயமாக
சொல்வார்கள்.
6:8. (இவர்
உண்மையான
தூதர்
என்று
சாட்சி
கூற)
இவர்
மீது
ஒரு
மலக்கு
இறக்கப்பட
வேண்டாமா?
என
அவர்கள்
கூறுகின்றனர்;
(அவ்வாறு)
நாம்
ஒரு
மலக்கை
இறக்கி
வைப்போமானால்
(அவர்களுடைய)
காரியம்
முடிக்கப்பட்டிருக்கும்;
பிறகு
அவர்களுக்குச்
சிறிதும்
அவகாசம்
கொடுக்கப்படமாட்டாது.
6:9.
நம்
தூதரை
ஒரு
மலக்காகவே
அனுப்புவதாயினும்
(அவர்கள்
மலக்கை
காணுஞ்
சக்தியில்லாதவர்கள்;
ஆதலால்)
அவரையும்
நாம்
மனித
உருவத்திலேயே
ஆக்கி(அனுப்பி)யிருப்போம்,
(அப்பொழுதும்,)
அந்த
இடத்தில்
அவர்கள்
(இப்பொழுது)
குழம்பிக்
கொள்வது
போல்
(அப்பொழுதும்)
நாம்
குழப்பத்தை
ஏற்படுத்தியிருப்போம்.
6:10.
(நபியே!)
உமக்கு
முன்னர்
வந்த
தூதர்களும்
நிச்சயமாக
(இவ்வாறே)
பரிகசிக்கப்பட்டனர்;
முடிவில்
அவர்கள்
எதைப்
பரிகசித்துக்
கொண்டிருந்தனரோ
அதுவே
பரிகசித்தவர்களை
வந்து
சூழ்ந்துகொண்டது.
6:11.
''பூமியில்
நீங்கள்
சுற்றி
வந்து,
(அல்லாஹ்வின்
வசனங்களைப்)
பொய்ப்பித்தவர்களின்
முடிவு
என்ன
ஆயிற்று
என்பதை
நீங்கள்
கவனித்துப்
பாருங்கள்""
என்று
(நபியே!)
நீர்
கூறுவீராக.
6:12.
''வானங்களிலும்,
பூமியிலுமுள்ளவை
யாருக்குச்
சொந்தம்""
என்று
(நபியே!)
நீர்
(அவர்களைக்)
கேளும்;
(அவர்கள்
என்ன
பதில்
கூறமுடியும்?
எனவே)
''எல்லாம்
அல்லாஹ்வுக்கே
சொந்தம்""
என்று
கூறுவீராக
அவன்
தன்
மீது
கருணையை
கடமையாக்கிக்
கொண்டான்;
நிச்சயமாக
இறுதி
நாளில்
உங்களையெல்லாம்
அவன்
ஒன்று
சேர்ப்பான்;
இதில்
எவ்வித
சந்தேகமும்
இல்லை
எவர்கள்
தமக்குத்
தாமே
நஷ்டத்தை
உண்டுபண்ணிக்
கொண்டார்களோ,
அவர்கள்
ஈமான்
கொள்ளமாட்டார்கள்.
6:13.
இரவிலும்
பகலிலும்
வசித்திருப்பவை
எல்லாம்
அவனுக்கே
சொந்தம்;
அவன்
(யாவற்றையும்)
செவியுறுவோனாகவும்,
நன்கறிபவனாகவும்
இருக்கின்றான்.
6:14.
''வானங்களையும்
பூமியையும்
படைத்த
அல்லாஹ்வையன்றி
வேறு
எவரையும்
என்
பாதுகாவலனாக
எடுத்துக்
கொள்வேனா?
அவனே
(யாவருக்கும்)
உணவளிக்கிறான்;
அவனுக்கு
எவராலும்
உணவளிக்கப்
படுவதில்லை""
என்று
(நபியே!)
நீர்
கூறுவீராக
இன்னும்
(அல்லாஹ்வுக்கு
வழிபடுபவர்களில்
முதன்மையானவனாக,
இருக்கும்படி
நான்
கட்டளையிடப்பட்டுள்ளேன்)
என்று
கூறுவீராக.
இன்னும்
நீர்
ஒருக்காலும்
இணைவைப்போரில்
ஒருவராகிவிட
வேண்டாம்.
6:15.
''நான்
என்
இறைவனுக்கு
மாறு
செய்தால்,
மகத்தான
நாளில்
(ஏற்படும்)
வேதனையை
நான்
நிச்சயமாக
பயப்படுகிறேன்""
என்று
கூறுவீராக.
6:16.
''அந்தாளில்
எவரொருவர்
அந்த
வேதனையை
விட்டும்
விலக்கப்படுவாரோ,
நிச்சயமாக
(அல்லாஹ்)
அவர்மீது
கிருபை
புரிந்துவிட்டான்.
இது
மிகத்
தெளிவான
வெற்றியாகும்""
(என்று
கூறுவீராக).
6:17.
''(நபியே!)
அல்லாஹ்
உமக்கு
ஏதாவதொரு
துன்பத்தை
ஏற்படுத்திவிட்டால்
அவனைத்
தவிர
(வேறு
யாரும்)
அதை
நீக்க
முடியாது.
இன்னும்
அவன்
ஒரு
நன்மையை
உண்டாக்கிவிட்டால்,
(அதை
எவரும்
தடுக்க
முடியாது.)
அவன்
எல்லாப்
பொருட்கள்
மீதும்
பேராற்றலுடையவனாக
இருக்கின்றான்.
6:18.
அவனே
தன்
அடியார்களை
அடக்கியாள்பவன்,
இன்னும்
அவனே
பூரன
ஞானமுள்ளவன்;
(யாவற்றையும்)
நன்கறிந்தவன்.
6:19.
(நபியே!)
''சாட்சியத்தில்
மிகவும்
பெரியது
எது?""
எனக்
கேளும்;
''அல்லாஹ்வே
எனக்கும்
உங்களுக்குமிடையே
சாட்சியாக
இருக்கின்றான்;
இந்த
குர்ஆன்
எனக்கு
வஹீயாக
அருளப்பட்டுள்ளது.
இதைக்
கொண்டு
உங்களையும்,
(இதை
அடைந்தவர்களையும்
நான்
அச்சமூட்டி
எச்சரிப்பதற்காக
நிச்சயமாக
வணக்கத்திற்குரிய
வேறு
தெய்வங்களும்
அல்லாஹ்வுடன்
இருப்பதாக
நீங்கள்
சாட்சி
கூறமுடியுமா?
(என்று
அவரிடம்
கேட்பீராக)
''இல்லை!
நான்
(அவ்வாறு)
சாட்சி
சொல்ல
முடியாது
என்றும்
கூறுவீராக
வணக்கத்திற்குரியவன்
நிச்சயமாக
அவன்
ஒருவன்
தான்;
அவனுக்கு
நீங்கள்
இணைவைப்பதிலிருந்து
நான்
நிச்சயமாக
விலகிக்
கொண்டவனே""
என்று
கூறிவிடும்.
6:20.
எவரும்
தம்
குழந்தைகளை
(சந்தேகமில்லாமல்
அறிவதைப்
போல்,
வேதங்
கொடுக்கப்
பெற்றவர்கள்,
(நம்
தூதராகிய
இவரை,
இறைவனுடைய
தூதர்
தாம்)
என்று
நன்கறிவார்கள்.
எவர்கள்
தமக்குத்
தாமே
நஷ்டமிழைத்துக்
கொண்டார்களோ
அவர்கள்
தாம்
இவரை
நம்பமாட்டார்கள்.
6:21.
அல்லாஹ்
மீது
பொய்யைக்
கற்பனை
செய்கிறவனை
விட,
அல்லது
அவனுடைய
வசனங்களைப்
பொய்யாக்குகிறவனை
விட
அநியாயக்காரன்
யார்?
நிச்சயமாக
அநியாயக்காரர்கள்
வெற்றி
பெறவே
மாட்டார்கள்.
6:22.
அவர்கள்
அனைவரையும்
நாம்
ஒன்று
சேர்க்கும்
நாளில்
நமக்கு
இணைவைத்தவர்களை
நோக்கி,
""நீங்கள்
(அல்லாஹ்வுக்கு
இணையாக
வைத்த)
உங்களுடைய
அந்தக்
கூட்டாளிகள்
எங்கே""
என்று
கேட்போம்.
6:23.
''எங்கள்
ரப்பாகிய
அல்லாஹ்வின்
மீது
ஆணையாக,
நாங்கள்
இணைவைப்பவர்களாக
இருந்ததில்லை""
என்று
கூறுவதைத்
தவிர
வேறு
அவர்களுடைய
பதில்
எதுவும்
இராது.
6:24.
(நபியே!)
அவர்கள்
தங்களுக்கு
எதிராக
எவ்வாறு
பொய்
கூறிக்
கொண்டார்கள்
என்பதைப்
பாரும்;
ஆனால்
(இறைவனுக்கு
இணையானவை
என்று
அவர்கள்
பொய்யாகக்)
கற்பனை
செய்ததெல்லாம்
(அவர்களுக்கு
உதவிடாது)
மறைந்துவிடும்.
6:25.
அவர்களில்
சிலர்
உம்
பேச்சைக்
கேட்(பது
போல்
பாவனை
செய்)கின்றனர்;
நாம்
அவர்களுடைய
உள்ளங்களில்
அதை
விளங்கிக்
கொள்ளாது
இருக்குமாறு
திரைகளையும்
இன்னும்
அவர்கள்
காதுகளில்
செவிட்டுத்
தன்மையும்
ஏற்படுத்தினோம்;
இன்னும்
அவர்கள்
எல்லா
அத்தாட்சிகளையும்
பார்த்தாலும்
அவற்றை
நம்பமாட்டார்கள்;
இன்னும்
இவர்கள்
உம்மிடம்
வந்தால்
உம்மோடு
வாதாடுவார்கள்;
''இவையெல்லாம்
முன்னோர்களுடைய
கட்டுக்
கதைகளேயன்றி
வேறில்லை""
என்று
இந்நிராகரிப்போர்
கூறுவார்கள்.
6:26.
மேலும்
அவர்கள்
(பிறரையும்)
அதை
(கேட்கவிடாது)
தடுக்கிறார்கள்;
இவர்களும்
அதைவிட்டு
ஒதுங்கிக்
கொள்கிறார்கள்;
அவர்கள்
தங்களைத்
தாங்களே
நாசமாக்கிக்
கொள்கிறார்கள்;
ஆனால்
அவர்கள்
(இதைப்)
புரிந்து
கொள்வதில்லை.
6:27.
நரக
நெருப்பின்முன்
அவர்கள்
நிறுத்தப்படும்போது
(நபியே!)
நீர்
அவர்களைப்
பார்ப்பீராயின்,
''எங்கள்
கேடே!
நாங்கள்
திரும்ப
(உலகத்திற்கு)
அனுப்பப்பட்டால்
(நலமாக
இருக்குமே)
அப்பொழுது
நாங்கள்
எங்களின்
இறைவனின்
அத்தாட்சிகளைப்
பொய்ப்பிக்க
மாட்டோம்;
நாங்கள்
முஃமின்களாக
இருப்போம்""
எனக்
கூறுவதைக்
காண்பீர்.
6:28.
எனினும்,
எதை
இவர்கள்
முன்பு
மறைத்திருந்தார்களோ
அது
இவர்களுக்கு
வெளிப்பட்டு
விட்டது
இவர்கள்
(உலகத்திற்குத்)
திருப்பி
அனுப்பப்பட்டாலும்
எதை
விட்டு
அவர்கள்
தடுக்கப்பட்டார்களோ
அதற்கே
மீளுவார்கள்;
நிச்சயமாக
அவர்கள்
பொய்யர்களே.
6:29.
அன்றியும்,
''இவ்வுலகத்தில்
நாம்
வாழ்ந்திருப்பதைத்
தவிர
(அப்பால்
மறுமை
வாழ்வு
என்று)
ஒன்றும்
இல்லை
நாம்
(மரணத்திற்குப்
பின்
மறுபடியும்)
எழுப்பப்
பட
மாட்டோம்""
என்றும்
அவர்கள்
கூறுகின்றனர்.
6:30.
இவர்கள்
(உயிர்ப்பிக்கப்பட்டு)
இவர்களுடைய
இறைவனின்
முன்
நிறுத்தப்படும்போது
இவர்களை
நீர்
காண்பீராயின்
(அது
சமயம்
இறைவன்
கேட்பான்)
இது
உண்மையல்லவா?
என்று
""ஆம்!
எங்களுடைய
ரப்பின்
மீது
ஆணையாக
(மெய்தான்)""
என்று
இவர்கள்
கூறுவார்கள்;
அப்போது,
''நீங்கள்
நிராகரித்துக்
கொண்டிருந்த
காரணத்தால்
வேதனையை
அனுபவியுங்கள்""
என்று
அல்லாஹ்
கூறுவான்.
6:31.
ஆகவே,
(மறுமை
நாளில்)
அல்லாஹ்வைச்
சந்திப்பதைப்
பொய்
என்று
கூறியவர்கள்
நிச்சயமாக
நஷ்டம்
அடைந்தவர்களாகி
விட்டனர்;
அவர்களிடம்
மறுமை
நாள்
திடீரென
வரும்பொழுது
உலகில்
நாங்கள்
அலட்சியமாய்
இருந்ததற்காக
எங்களுக்கு
ஏற்பட்ட
கை
சேதமே
என்று
கூறுவார்கள்.
மேலும்
அவர்கள்
தங்கள்
(பாவச்)
சுமைகளை
தங்கள்
முதுகுகளின்
மேல்
சுமப்பார்கள்;
அவர்கள்
சுமப்பது
மிகவும்
கெட்டது
என்பதை
அறிந்துக்
கொள்ளுங்கள்.
6:32.
உலக
வாழ்க்கை
வீணும்
விளையாட்டுமேயன்றி
வேறில்லை
பயபக்தியுடையவர்களுக்கு
நிச்சயமாக
மறுமை
வீடே
மிகவும்
மேலானதாகும்;
நீங்கள்
இதைப்
புரிந்து
கொள்ள
வேண்டாமா?
6:33.
(நபியே!)
அவர்கள்
(உம்மைப்
பொய்யரெனக்)
கூறுவது
நிச்சயமாக
உம்மைக்
கவலையில்
ஆழ்த்துகிறது
என்பதை
நாம்
அறிவோம்;
அவர்கள்
உம்மைப்
பொய்யாக்கவில்லை
ஆனால்
இந்த
அநியாயக்காரர்கள்
அல்லாஹ்வின்
வசனங்களையல்லலவா
மறுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
6:34.
உமக்கு
முன்னிருந்த
(நம்)
தூதர்களும்
பொய்ப்பிக்கப்பட்டனர்;
அவர்களுக்கு
நம்
உதவி
வரும்வரை,
தாம்
பொய்ப்பிக்கப்பட்டதையும்,
துன்புறுத்தப்பட்டதையும்,
அவர்கள்
பொறுத்துக்
கொண்டனர்;
அல்லாஹ்வின்
வாக்குகளை
யாராலும்
மாற்ற
முடியாது
(உங்களுக்கு
முன்னிருந்த)
தூதர்களின்
இத்தகைய
செய்திகள்
உம்மிடம்
வந்தேயிருக்கின்றன.
6:35.
(நபியே!)
அவர்களின்
புறக்கணிப்பு
உமக்கு
பெருங்
கஷ்டமாக
இருந்தால்,
உம்மால்
முடியுமானால்
பூமியில்
சுரங்கம்
வைத்து
அல்லது
வானத்திலே
ஓர்
ஏணி
வைத்து
(ஏறிச்சென்று
அவர்கள்
விருப்பப்படி)
ஓர்
அத்தாட்சியை
அவர்களிடம்
கொண்டுவாரும்;
(அப்பொழுதும்
அவர்கள்
உம்மை
நிராகரித்துக்
கொண்டு
தானிருப்பார்கள்.)
அன்றியும்
அல்லாஹ்
நாடினால்
அவர்கள்
அனைவரையும்
நேர்
வழியில்
ஒன்று
சேர்த்து
விடுவான்;
ஆகவே
அறிவில்லாதவர்களில்
ஒருவராக
நீர்
ஆகிவிடவேண்டாம்.
6:36.
(சத்தியத்திற்கு)
செவிசாய்ப்போர்தாம்
நிச்சயமாக
உம்
உபதேசத்தை
ஏற்றுக்
கொள்வார்கள்;
(மற்றவர்கள்
உயிரற்றவர்களைப்
போன்றோரே!)
இறந்தவர்களை
அல்லாஹ்
உயிர்ப்பித்து
எழுப்புவான்;
பின்னர்
அவனிடமே
அவர்கள்
மீட்டப்படுவார்கள்.
6:37.
(நமது
விருப்பம்
போல்)
ஓர்
அத்தாட்சி
அவருடைய
இறைவனிடமிருந்து
அவர்
மீது
இறக்கப்பட
வேண்டாமா?
என்று
அவர்கள்
கேட்கிறார்கள்;
(நபியே!)
நீர்
கூறும்;
''நிச்சயமாக
அல்லாஹ்
(அத்தகைய)
ஓர்
அத்தாட்சியை
இறக்கி
வைக்க
வல்லமையுடையவனே
எனினும்
அவர்களில்
பெரும்பாலோர்
அதை
அறிந்து
கொள்வதில்லை""
6:38.
பூமியில்
ஊர்ந்து
திரியும்
பிராணிகளும்,
தம்
இரு
இறக்கைகளால்
பறக்கும்
பறவைகளும்
உங்களைப்
போன்ற
இனமேயன்றி
வேறில்லை
(இவற்றில்)
எதையும்
(நம்
பதிவுப்)
புத்தகத்தில்
நாம்
குறிப்பிடாமல்
விட்டு
விடவில்லை
இன்னும்
அவை
யாவும்
அவற்றின்
இறைவனிடம்
ஒன்றுசேர்க்கப்படும்.
6:39.
நம்முடைய
வசனங்களைப்
பொய்ப்பிப்பவர்கள்
(குஃப்ரு
என்னும்)
இருள்களில்
செவிடர்களாகவும்,
ஊமையர்களாகவும்
இருக்கின்றனர்;
அல்லாஹ்
தான்
நாடியவர்களைத்
தவறான
வழியில்
செல்ல
விட்டு
விடுகிறான்;
இன்னும்
அவன்
நாடியவரை
நேர்வழியில்
செலுத்துகின்றான்.
6:40. (நபியே!
அவர்களிடம்)
நீர்
கூறும்;
''அல்லாஹ்வுடைய
வேதனை
உங்களிடம்
வந்து
விட்டால்,
அல்லது
(நீங்கள்
அஞ்சும்)
அந்த
(விசாரணைக்)
காலம்
வந்துவிட்டால்
(அதிலிருந்து
உங்களைக்
காப்பாற்ற)
அல்லாஹ்வையன்றி
(வேறு
யாரையாவது)
நீங்கள்
உண்மையாளர்களாக
இருந்தால்
-
அழைப்பீர்களா?""
என்பதை
(நீங்கள்
சிந்தித்துப்)
பார்த்தீர்களா?
6:41. ''அப்படியல்ல!
-
அவனையே
நீங்கள்
அழைப்பீர்கள்;
அப்போது
அவன்
எதற்காக
அவனை
அழைத்தீர்களோ
அ(த்
துன்பத்)தை
தான்
நாடினால்
நீக்கிவிடுவான்,
இன்னும்
(அவனுடன்)
இணை
வைத்திருந்தவற்றை
நீங்கள்
மறந்து
விடுவீர்கள்.
6:42. (நபியே!)
உமக்கு
முன்னர்
இருந்த
சமூகத்தாருக்கும்
நாம்
(நம்)
தூதர்களை
அனுப்பினோம்;
அச்சமூகத்தாரை
நோயைக்
கொண்டும்
வறுமையைக்
கொண்டும்
பிடித்தோம்
-
அவர்கள்
பணிந்து
வரும்
பொருட்டு.
6:43.
நம்மிடமிருந்து
அவர்களுக்கு
வேதனை
வந்தபோது
அவர்கள்
பணிந்திருக்க
வேண்டாமா?
அதற்கு
மாறாக
அவர்களுடைய
இருதயங்கள்
இறுகிவிட்டன
அவர்கள்
செய்து
கொண்டிருந்ததையே,
ஷைத்தான்
அவர்களுக்கு
அழகாகக்
காட்டிவிட்டான்.
6:44.
அவர்களுக்கு
நினைவூட்டப்பட்ட
நற்போதனைகளை
அவர்கள்
மறந்துவிட்ட
போது,
அவர்களுக்கு
(முதலில்)
எல்லாப்
பொருட்களின்
வாயில்களையும்
நாம்
திறந்து
விட்டோம்
-
பின்னர்,
அவர்களுக்கு
கொடுக்கப்பட்டதைக்
கொண்டு
அவர்கள்
மகிழ்ச்சியடைந்து
கொண்டிருந்த
வேளை
(நம்
வேதனையைக்
கொண்டு)
அவர்களை
திடீரெனப்
பிடித்துக்
கொண்டோம்;
அப்போது
அவர்கள்
நம்பிக்கை
இழந்தவர்களாக
ஆகிவிட்டனர்.
6:45.
எனவே,
அக்கிரமம்
செய்து
கொண்டிருந்த
அக்கூட்டத்தார்
வேரறுக்கப்பட்டனர்;
''எல்லாப்
புகழும்
உலகங்கள்
யாவற்றுக்கும்
இரட்சகனான
அல்லாஹ்வுக்கே
ஆகும்.""
6:46. ''அல்லாஹ்
உங்களுடைய
செவிப்புலனையும்,
பார்க்கும்
சக்தியையும்
எடுத்துவிட்டு,
உங்கள்
இருதயங்களின்
மீது
முத்திரையிட்டு
விடுவானானால்
-
அதை
உங்களுக்கு
அல்லாஹ்வையன்றி
வேறு
எந்த
இறைவன்
கொடுப்பான்?
என்று
நீங்கள்
(சிந்தித்துப்)
பார்த்தீர்களா?""
என்று
(நபியே!)
நீர்
கேட்பீராக,
(நம்)
அத்தாட்சிகளை
எவ்வாறு
விவரிக்கின்றோம்
என்பதை
(நபியே!)
நீர்
கவனிப்பீர்ராக
(இவ்வாறு
இருந்தும);
பின்னரும்
அவர்கள்
புறக்கணித்தே
வருகின்றனர்.
6:47. ''திடீரென்றோ,
அல்லது
முன்
எச்சரிக்கையாகவோ
அல்லாஹ்வின்
வேதனை
உங்களிடம்
வந்து
விட்டால்
(என்ன
நிலை
ஏற்படும்
என்பதை
நீங்கள்
சிந்தித்தீர்களா?)
அச்சமயம்
அக்கிரமக்காரர்கள்
தவிர
வேறு
யாரும்
அழிக்கப்படுவார்களா?
என்று
(நபியே!)
நீர்
கேளும்.
6:48. (நன்மையைக்
கொண்டு)
நன்மாராயம்
கூறுவோராகவும்,
(தீமையை
விட்டு)
எச்சரிக்கை
செய்வோராகவுமேயன்றி
நாம்
தூதர்களை
அனுப்பவில்லை
எனவே
எவர்
நம்பி,
சீர்திருந்தி
நடந்தார்களோ,
அவர்களுக்கு
அச்சமுமில்லை
அவர்கள்
துக்கப்படவும்
மாட்டார்கள்.
6:49.
ஆனால்
எவர்
நம்
திருவசனங்களைப்
பொய்ப்பிக்கிறார்களோ
அவர்களை
அவர்கள்
செய்து
வரும்
பாவங்களின்
காரணமாக
வேதனைப்
பிடித்துக்
கொள்ளும்.
6:50. (நபியே!)
நீர்
கூறும்;
''என்னிடத்தில்
அல்லாஹ்வின்
பொக்கிஷங்கள்
இருக்கின்றன
என்று
நான்
உங்களிடம்
கூறவில்லை.
மறைவானவற்றை
நான்
அறியமாட்டேன்;
நிச்சயமாக
நான்
ஒரு
மலக்காக
இருக்கின்றேன்
என்றும்
நான்
உங்களிடம்
சொல்லவில்லை
எனக்கு
(வஹீயாக)
அறிவிக்கப்பட்டதைத்
தவிர
(வேறு
எதையும்)
நான்
பின்பற்றவில்லை.""
இன்னும்
நீர்
கூறும்;
''குருடனும்
பார்வையுடைவனும்
சமமாவாரா?
நீங்கள்
சிந்திக்க
வேண்டாமா?""
6:51.
இன்னும்
எவர்
தங்கள்
இறைவன்
முன்
(மறுமையில்)
கொண்டு
வரப்படுவது
பற்றி
பயப்படுகிறார்களோ
அவர்களுக்கு
(இவ்வேதத்தைக்
கொண்டு)
எச்சரிக்கை
செய்யும்
- (பாவத்திலிருந்து
நீங்கி)
அவர்கள்
பயபக்தியுடையோராகும்
பொருட்டு;
அவனைத்
தவிர
அவர்களுக்குப்
பாதுகாப்பளிப்பவரோ,
பரிந்து
பேசுபவரோ
வேறு
யாரும்
இல்லை.
6:52. (நயியே!)
தங்கள்
இறைவனுடைய
திருப்
பொருத்தத்தை
நாடி,
எவர்
காலையிலும்
மாலையிலும்,
அவனை(ப்
பிரார்த்தித்து)
அழைத்துக்
கொண்டிருக்கிறார்களோ
அவர்களை
நீர்
விரட்டி
விடாதீர்;
அவர்களுடைய
கேள்வி
கணக்குப்
பற்றி
உம்மீது
பொறுப்பில்லை,
உம்முடைய
கேள்வி
கணக்குப்
பற்றி
அவர்கள்
மீதும்
யாதொரு
பொறுப்புமில்லை
-
எனவே
நீர்
அவர்களை
விரட்டி
விட்டால்,
நீரும்
அநியாயம்
செய்பவர்களில்
ஒருவராகி
விடுவீர்.
6:53.
நமக்கிடையில்
(ஏழைகளாகிய)
இவர்கள்
மீதா
அல்லாஹ்
அருள்புரிந்து
விட்டான்?
என்று
(செல்வந்தர்கள்)
கூற
வேண்டுமென்பதற்காக
அவர்களில்
சிலரை
சிலரைக்கொண்டு
நாம்
இவ்வாறு
சோதித்தோம்.
நன்றி
செலுத்துபவர்களை
அல்லாஹ்
மிக
அறிந்தவனில்லையா?
6:54.
நம்
வசனங்களை
நம்பியவர்கள்
உம்மிடம்
வந்தால்,
''ஸலாமுன்
அலைக்கும்
(உங்கள்
மீது
சாந்தியும்
சமாதானமும்
உண்டாவதாக)""
என்று
(நபியே!)
நீர்
கூறும்,
உங்கள்
இறைவன்
கிருபை
செய்வதைத்
தன்
மீது
கடமையாக்கிக்
கொண்டான்;
உங்களில்
எவரேனும்
அறியாமையினால்
ஒரு
தீமையைச்
செய்து
விட்டு
அதற்குப்
பின்,
பாவத்தை
விட்டும்
திரும்பி,
திருத்திக்
கொண்டால்,
நிச்சயமாக
அவன்
(அல்லாஹ்)
மன்னிப்பவனாகவும்,
மிக்க
கருணையுடையவனாகவும்
இருக்கின்றான்.
6:55.
குற்றவாளிகளின்
வழி
(இன்னதென்று
சந்தேகமின்றித்)
தெளிவாகுவதற்காக
நாம்
(நம்)
வசனங்களை
இவ்வாறு
விவரிக்கின்றோம்.
6:56. ''நீங்கள்
அல்லாஹ்வையன்றி
வேறு
எவர்களை(க்
கடவுளர்களாக)
அழைக்கின்றீர்களோ
அவர்களை
வணங்கக்
கூடாதென்று
நான்
நிச்சயமாக
தடுக்கப்பட்டு
உள்ளேன்""
(என்று
நபியே!)
நீர்
கூறுவீராக
''உங்களுடைய
மன
இச்சைகளை
நான்
பின்பற்ற
மாட்டேன்;
(நான்
அப்படிச்
செய்தால்)
நான்
நிச்சயமாக
வழி
தவறி
விடுவேன்;
மேலும்
நான்
நேர்வழி
பெற்றவர்களிலும்
இருக்கமாட்டேன்""
என்றும்
(நபியே!)
நீர்
கூறுவீராக.
6:57.
பின்னும்
நீர்
கூறும்;
''நான்
என்னுடைய
ரப்பின்
தெளிவான
அத்தாட்சியின்
மீதே
இருக்கின்றேன்;
ஆனால்
நீங்களோ
அதைப்
பொய்ப்பிக்கின்றீர்கள்.
நீங்கள்
எதற்கு
அவசரப்படுகின்றீர்களோ
அ(வ்வேதனையான)து
என்
அதிகாரத்தில்
இல்லை
அதிகாரம்
அனைத்தும்
அல்லாஹ்விடமேயன்றி
வேறில்லை
சத்தியத்தையே
அவன்
கூறுகின்றான்,
தீர்ப்பு
வழங்குவோரில்
அவனே
மிகவும்
மேலானவனாக
இருக்கிறான்.
6:58. (நபியே!)
நீர்
கூறும்;
''நீங்கள்
எதற்கு
அசவரப்படுகின்றீர்களோ
அது
என்
அதிகாரத்தில்
இருந்திருக்குமானால்,
உங்களுக்கும்
எனக்குமிடையேயுள்ள
விவகாரம்
உடனே
தீர்க்கப்பட்டேயிருக்கும்;
மேலும்,
அல்லாஹ்
அநியாயம்
செய்வோரை
நன்கு
அறிந்தவனாக
இருக்கின்றான்.""
6:59.
அவனிடமே
மறைவானவற்றின்
திறவுகோல்கள்
இருக்கின்றன.
அவற்றை
அவனன்றி
எவரும்
அறியார்.
மேலும்
கரையிலும்
கடலிலும்
உள்ளவற்றையெல்லாம்
அவன்
அறிவான்;
அவன்
அறியாமல்
ஓர்
இலையும்
உதிர்வதில்லை.
பூமியின்
(ஆழத்தில்
அடர்ந்த)
இருள்களில்
கிடக்கும்
சிறு
வித்தும்,
பசுமையானதும்,
உலர்ந்ததும்
(எந்தப்
பொருளும்)
தெளிவான
(அவனுடைய)
பதிவேட்டில்
இல்லாமலில்லை.
6:60.
அவன்
தான்
இரவில்
உங்களை
மரிக்கச்
செய்கிறான்;
இன்னும்
நீங்கள்
பகலில்
செய்தவற்றையெல்லாம்
அறிகிறான்;
மீண்டும்
உங்களைக்
குறிப்பிட்டதவணை
முடிப்பதற்காக
பகலில்
எழுப்புகிறான்;
பின்னர்
உங்களுடைய
(இறுதி)
மீட்சி
அவனிடமே
இருக்கிறது
அப்பால்
நீங்கள்
(இவ்வுலகில்)
செய்து
கொண்டிருந்ததை
அவன்
உங்களுக்கு
அறிவிப்பான்.
6:61.
அவன்
தன்
அடியார்களை
அடக்கியாளுபவனாக
இருக்கிறான்;
அன்றியும்,
உங்கள்
மீது
பாதுகாப்பாளர்களையும்
அனுப்புகிறான்;
உங்களில்
ஒருவருக்கு
மரணம்
வந்துவிடுமானால்,
நம்
அமரர்கள்
அவர்
ஆத்மாவை
எடுத்துக்
கொள்கிறார்கள்
-
அவர்கள்
(தம்
கடமையில்)
தவறுவதில்லை.
6:62.
பின்னர்
அவர்கள்
தங்களின்
உண்மையான
பாதுகாவலனான
அல்லாஹ்விடம்
கொண்டுவரப்படுவார்கள்;
(அப்போது
தீர்ப்பு
கூறும்)
அதிகாரம்
அவனுக்கே
உண்டு
என்பதை
அவர்கள்
அறிந்து
கொள்ளட்டும்,
அவன்
கணக்கு
வாங்குவதில்
மிகவும்
விரைவானவன்.
6:63. (நபியே!)
நீர்
கூறும்;
நீங்கள்
கரையிலும்
கடலிலும்
உள்ள
இருள்களில்
(சிக்கித்
தவிக்கும்
சமயத்தில்)
''எங்களை
இதைவிட்டுக்
காப்பாற்றிவிட்டால்,
நிச்சயமாக
நாங்கள்
நன்றி
செலுத்துவோரில்
ஆகி
விடுவோம்
என்று
பணிவாகவும்,
மறைவாகவும்
நீங்கள்
அவனிடம்
பிரார்த்திக்கின்றீர்களே
அப்போது
உங்களை
காப்பாற்றுகிறவன்
யார்?""
6:64. ''இதிலிருந்தும்,
இன்னும்
மற்றெல்லாத்
துன்பங்களிலிருந்தும்
உங்களைக்
காப்பாற்றுபவன்
அல்லாஹ்வே
பின்னர்
நீங்கள்
(அவனுக்கு)
இணை
வைக்கின்றீர்களே""
என்று
கூறுவீராக.
6:65. (நபியே!)
நீர்
கூறும்;
''உங்கள்
(தலைக்கு)
மேலிருந்தோ
அல்லது
உங்களுடைய
கால்களுக்குக்
கீழிருந்தோ
உங்களுக்குத்
துன்பம்
ஏற்படும்படி
செய்யவும்;
அல்லது
உங்களைப்
பல
பிரிவுகளாக்கி
உங்களில்
சிலர்
சிலருடைய
கொடுமையை
அனுபவிக்கும்படிச்
செய்யவும்
அவன்
ஆற்றலுள்ளவனாக
இருக்கின்றான்.""
அவர்கள்
விளங்கிக்
கொள்வதற்காக
(நம்)வசனங்களை
எவ்வாறு
(பலவகைகளில்
தெளிவாக்கி)
விவரிக்கின்றோம்
என்பதை
(நபியே!)
நீர்
கவனிப்பீராக.
6:66. (நபியே!
திருக்குர்ஆனாகிய)
இது
முற்றிலும்
உண்மையாக
இருந்தும்,
உம்
சமூகத்தார்
இதை
நிராகரிக்கின்றனர்;
எனவே,
''நான்
உங்கள்
மீது
பொருப்பாளன்
அல்ல""
என்று
(நபியே!)
நீர்
கூறிவிடும்.
6:67.
ஒவ்வொரு
காரியத்திற்கும்
ஒரு
குறிப்பிட்ட
காலமுண்டு;
(அதனை)
சீக்கரமே
நீங்கள்
அறிந்து
கொள்வீர்கள்.
6:68. (நபியே!)
நம்
|