|
அத்தியாயம்-61
ஸ_ரத்துஸ்
ஸஃப்ஃபு
(அணிவகுப்பு)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
61:1.
வானங்களிலுள்ளவையும்,
பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹ{
(துதி)
செய்து கொண்டிருக்கின்றன அவன் யாவரையும்
மிகைத்தவன்,
ஞானம் மிக்கவன்.
61:2.
ஈமான் கொண்டவர்களே!
நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
61:3.
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம்
பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
61:4.
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான
கட்டடத்தைப் போல் அணியில் நின்று,
அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோ,
அவர்களை நிச்சயமாக
(அல்லாஹ்)
நேசிக்கின்றான்.
61:5.
மேலும்,
மூஸா தம் சமூகத்தாரிடம்;
''என்
சமூகத்தாரே!
நிச்சயமாக நான்,
உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன்
என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே,
ஏன்
என்னை துன்புறுத்துகிறீர்கள்?""
என்று கூறிய வேளையை
(நபியே!
நீர் நினைவு கூர்வீராக);
ஆகவே ஆவர்கள்
(நேர்வழியிலிருந்து)
சருகிய பொழுது,
அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை
(நேர்வழியிலிருந்து)
சருகச் செய்தான்.
அன்றியும்
-
ஃபாஸிக்குகளான
-
பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில்
செலுத்தமாட்டான்.
61:6.
மேலும்,
மர்யமின் குமாரர் ஈஸா,
''இஸ்ராயீல்
மக்களே!
எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்;
எனக்குப் பின்னர் வரவிருக்கும்
'அஹமது"
என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம்
கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின்
தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்""
என்று கூறிய வேளையை
(நபியே!
நீர் நினைவு கூர்வீராக!)
எனினும்,
அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு
வந்த போது,
அவர்கள்
''இது
தெளிவான சூனியமாகும்""
என்று கூறினார்கள்.
61:7.
மேலும்,
எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில்,
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ
அவனைவிட அநியாயக்காரன் யார்?
அன்றியும்,
அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில்
செலுத்த மாட்டான்.
61:8.
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக்
கொண்டு
(ஊதி)
அணைத்து விட நாடுகின்றனர்,
ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும்,
அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
61:9. (இணை
வைத்து வணங்கும்)
முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும்,
மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும்
பொருட்டு,
அவனே தன் தூதரை நேர்வழியுடனும்,
சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.
61:10.
ஈமான் கொண்டவர்களே!
நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை
ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு
அறிவிக்கட்டுமா?
61:11. (அது)
நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும்
ஈமான் கொண்டு,
உங்கள் பொருள்களையும்,
உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பதையில்
ஜிஹாது
(அறப்போர்)
செய்வதாகும்;
நீங்கள் அறிபவர்களா இருப்பின்,
இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
61:12.
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்,
சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்;
அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்,
அன்றியும்,
நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின்
மணம் பொருந்திய இருப்பிடங்களும்
(உங்களுக்கு)
உண்டு;
இதுவே மகத்தான பாக்கியமாகும்.
61:13.
அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு,
(அதுதான்)
அல்லாஹ்விடமிருந்து உதவியும்,
நெருங்கி வரும் வெற்றியுமாகும்,
எனவே ஈமான் கொண்டவர்களுக்கு
(இதைக்
கொண்டு)
நன்மாராயம் கூறுவீராக!
61:14.
ஈமான் கொண்டவர்களே!
மர்யமின் குமாரர் ஈஸா
(தம்)
சீடர்களை நோக்கி,
''அல்லாஹ்வுக்காக
எனக்கு உதவி செய்வோர் யார்?""
எனக் கேட்க,
சீடர்கள்,
''நாங்கள்
அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்""
என்று கூறியதுபோல்,
நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள்
-
எனினும்,
இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது,
பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது,
ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு,
அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம்
-
அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
|