அத்தியாயம்-7
சூரத்துல்
அஃராஃப்
(சிகரங்கள்)
அளவற்ற
அருளாளனும்
நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
7:1.
அலிஃப்,
லாம்,
மீம்,
ஸாத்.
7:2. (நபியே!)
இதன்
மூலம்
நீர்
எச்சரிக்கை
செய்வதற்காகவும்
முஃமின்களுக்கு
நல்லுபதேசமாகவும்
உமக்கு
அருளப்பட்ட
வேதமாகும்(இது).
எனவே
இதனால்
உமது
உள்ளத்தில்
எந்த
தயக்கமும்
ஏற்பட
வேண்டாம்.
7:3. (மனிதர்களே!)
உங்கள்
இறைவனிடமிருந்து,
உங்களுக்கு
இறக்கப்பட்டதைப்
பின்பற்றுங்கள்;
அவனையன்றி
(வேறெவரையும்)
பாதுகாவலர்(களாக்கி
கொண்டு
அவர்)களை
பின்பற்றாதீர்கள்;
நீங்கள்
சொற்பமாகவே
நல்லுணர்வு
பெறுகிறீர்கள்.
7:4. (பாவிகள்
வாழ்ந்து
வந்த)
எத்தனையோ
ஊர்களை
நாம்
அழித்திருக்கிறோம்;
நமது
வேதனை
அவர்களை(த்
திடீரென)
இரவிலோ
அல்லது
(களைப்பாறுவதற்காகப்)
பகலில்
தூங்கிக்கொண்டிருக்கும்
போதோ
வந்தடைந்தது.
7:5.
நமது
வேதனை
அவர்களுக்கு
ஏற்பட்டபோது,
அவர்கள்;
''நிச்சயமாக
நாம்
அநியாயக்காரர்களாக
இருந்தோம்""
என்று
சொன்னதைத்
தவிர
வேறொன்றும்
கூறவில்லை.
7:6.
யாருக்கு
(நம்)
தூதர்கள்
அனுப்பப்பட்டார்களோ
அவர்களைத்
திடனாக
விசாரணை
செய்வோம்.
இன்னும்
(நம்)
தூதர்களையும்
திடனாக
விசாரிப்போம்.
7:7.
ஆகவே,
(பூரணமாக
நாம்)
அறிந்திருக்கிறபடி
(அது
சமயம்)
அவர்களிடம்
சொல்லிக்
காண்பிப்போம்;
(அவர்கள்
செய்ததை
விட்டும்)
நிச்சயமாக
நாம்
மறைவாக
இருக்கவில்லை.
7:8.
அன்றைய
தினம்
(அவரவரின்
நன்மை
தீமைகளை)
எடைபோடுவது
உறுதி;
அப்போது
யாருடைய
(நன்மையின்)
எடை
கனத்ததோ
அவர்கள்
தாம்
வெற்றியாளர்கள்.
7:9.
யாருடைய
(நன்மையின்)
எடை
(குறைந்து)
இலேசாக
இருக்கின்றதோ,
அவர்கள்
நம்
வசனங்களுக்கு
மாறுசெய்த
காரணத்தால்,
அவர்கள்
தமக்கு
தாமே
நஷ்டம்
விளைவித்துக்
கொண்டவர்கள்
ஆவார்கள்.
7:10. (மனிதர்களே!)
நிச்சயமாக
நாம்
உங்களை
பூமியில்
வசிக்கச்
செய்தோம்;
அதில்
உங்களுக்கு
வாழ்க்கை
வசதிகளையும்
ஆக்கித்தந்தோம்
-
எனினும்
நீங்கள்
நன்றி
செலுத்துவதோ
மிகவும்
சொற்பமேயாகும்.
7:11.
நிச்சயமாக
நாமே
உங்களைப்
படைத்தோம்;
பின்பு
உங்களுக்கு
உருக்கொடுத்தோம்.
அதன்பின்,
''ஆதமுக்கு
ஸ{ஜுது
செய்யுங்கள்
(சிரம்
பணியுங்கள்)""
என்று
மலக்குகளிடம்
கூறினோம்;
இப்லீஸைத்
தவிர
(மற்ற
மலக்குகள்)
யாவரும்
(அவருக்குத்)
தலைவணக்கம்
செய்தார்கள்;
அவன்
(மட்டும்)
தலைவணக்கம்
செய்தவர்களில்
ஒருவனாக
இருக்கவில்லை.
7:12.
''நான்
உனக்குக்
கட்டளையிட்ட
போது,
நீ
ஸஜ்தா
செய்யாதிருக்க
உன்னைத்
தடுத்தது
யாது?""
என்று
அல்லாஹ்
கேட்டான்;
''நான்
அவரை
(ஆதமை)விட
மேலானவன்
-
என்னை
நீ
நெருப்பினால்
படைத்தாய்,
அவரை
களிமண்ணால்
படைத்தாய்""
என்று
(இப்லீஸ்
பதில்)
கூறினான்.
7:13.
''இதிலிருந்து
நீ
இறங்கிவிடு,
நீ
பெருமை
கொள்வதற்கு
இங்கு
இடமில்லை,
ஆதலால்
(இங்கிருந்து)
நீ
வெளியேறு
-
நிச்சயமாக
நீ
சிறுமை
அடைந்தோரில்
ஒருவனாகி
விட்டாய்''
என்று
அல்லாஹ்
கூறினான்.
7:14.
''(இறந்தவர்)
எழுப்பப்படும்
நாள்
வரை
எனக்கு
அவகாசம்
கொடுப்பாயாக""
என
அவன்
(இப்லீஸ்)
வேண்டினான்.
7:15. (அதற்கு
அல்லாஹ்)
''நிச்சயமாக
நீ
அவகாசம்
கொடுக்கப்பட்டவர்களில்
ஒருவனாவாய்""
என்று
கூறினான்.
7:16. (அதற்கு
இப்லீஸ்)
''நீ
என்னை
வழி
கெட்டவனாக
(வெளியேற்றி)
விட்டதன்
காரணத்தால்,
(ஆதமுடைய
சந்ததியரான)
அவர்கள்
உன்னுடைய
நேரான
பாதையில்
(செல்லாது
தடுப்பதற்காக
அவ்வழியில்)
உட்கார்ந்து
கொள்வேன்""
என்று
கூறினான்.
7:17.
''பின்
நிச்சயமாக
நான்
அவர்கள்
முன்னும்,
அவர்கள்
பின்னும்,
அவர்கள்
வலப்பக்கத்திலும்,
அவர்கள்
இடப்பக்கத்திலும்
வந்து
(அவர்களை
வழி
கெடுத்துக்)
கொண்டிருப்பேன்;
ஆதலால்
நீ
அவர்களில்
பெரும்பாலோரை
(உனக்கு)
நன்றி
செலுத்துவோர்களாகக்
காணமாட்டாய்""
(என்றும்
கூறினான்).
7:18.
அதற்கு
இறைவன்,
''நீ
நிந்திக்கப்பட்டவனாகவும்,
வெருட்டப்பட்டவனாகவும்
இங்கிருந்து
வெளியேறி
விடு
-
அவர்களில்
உன்னைப்
பின்பற்றுவோரையும்,
உங்கள்
யாவரையும்
கொண்டு
நிச்சயமாக
நரகத்தை
நிரப்புவேன்""
என்று
கூறினான்.
7:19. (பின்பு
இறைவன்
ஆதமை
நோக்கி;)
''ஆதமே!
நீரும்,
உம்
மனைவியும்
சுவர்க்கத்தில்
குடியிருந்து,
நீங்கள்
இருவரும்
உங்கள்
விருப்பப்பிரகாரம்
புசியுங்கள்;
ஆனால்
இந்த
மரத்தை
(மட்டும்)
நெருங்காதீர்கள்;
(அப்படிச்
செய்தால்)
நீங்கள்
இருவரும்
அநியாயம்
செய்தவர்கள்
ஆவீர்கள்""
(என்று
அல்லாஹ்
கூறினான்).
7:20.
எனினும்
அவ்விருவருக்கும்
மறைந்திருந்த
அவர்களுடைய
(உடலை)
மானத்தை
அவர்களுக்கு
வெளிப்படுத்தும்
பொருட்டு
ஷைத்தான்
அவ்விருவரின்
உள்ளங்களில்
(தவறான
எண்ணங்களை)
ஊசலாடச்
செய்தான்;
(அவர்களை
நோக்கி,
''அதன்
கனியை
நீங்கள்
புசித்தால்)
நீங்கள்
இருவரும்
மலக்குகளாய்
விடுவீர்கள்,
அல்லது
(இச்சுவனபதியில்)
என்றென்னும்
தங்கிவிடுவீர்கள்
என்பதற்காகவேயன்றி
(வேறெதற்கும்,)
இந்த
மரத்தை
விட்டும்
உங்களை
உங்கள்
இறைவன்
தடுக்கவில்லை""
என்று
கூறினான்.
7:21.
''நிச்சயமாக
நான்
உங்களிருவருக்கும்
நற்போதனை
செய்பவனாக
இருக்கிறேன்""
என்று
சத்தியம்
செய்து
கூறினான்.
7:22.
இவ்வாறு,
அவன்
அவ்விருவரையும்
ஏமாற்றி,
அவர்கள்
(தங்கள்
நிலையிலிருந்து)
கீழே
இறங்கும்படிச்
செய்தான்
-
அவர்களிருவரும்
அம்மரத்தினை
(அம்மரத்தின்
கனியை)ச்
சுவைத்தபோது
-
அவர்களுடைய
வெட்கத்தலங்கள்
அவர்களுக்கு
வெளியாயிற்று
அவர்கள்
சுவனபதியின்
இலைகளால்
தங்களை
மூடிக்கொள்ள
முயன்றனர்;
(அப்போது)
அவர்களை
அவர்கள்
இறைவன்
கூப்பிட்டு;
''உங்களிருவரையும்
அம்மரத்தை
விட்டும்
நான்
தடுக்கவில்லையா?
நிச்சயமாக
ஷைத்தான்
உங்களுக்கு
பகிரங்கமான
பகைவன்
என்று
நான்
உங்களுக்கு
சொல்லவில்லையா?""
என்று
கேட்டான்.
7:23.
அதற்கு
அவர்கள்;
''எங்கள்
இறைவனே!
எங்களுக்கு
நாங்களே
தீங்கிழைத்துக்
கொண்டோம்
-
நீ
எங்களை
மன்னித்துக்
கிருபை
செய்யாவிட்டால்,
நிச்சயமாக
நாங்கள்
நஷ்டமடைந்தவர்களாகி
விடுவோம்""
என்று
கூறினார்கள்.
7:24. (அதற்கு
இறைவன்,
''இதிலிருந்து)
நீங்கள்
இறங்குங்கள்
-
உங்களில்
ஒருவர்
மற்றவருக்குப்
பகைவராயிருப்பீர்கள்;
உங்களுக்கு
பூமியில்
தங்குமிடம்
இருக்கிறது
அதில்
ஒரு
(குறிப்பிட்ட)
காலம்
வரை
நீங்கள்
சுகம்
அனுபவித்தலும்
உண்டு""
என்று
கூறினான்.
7:25.
''அங்கேயே
நீங்கள்
வாழ்ந்திருப்பீர்கள்;
அங்கேயே
நீங்கள்
மரணமடைவீர்கள்;
(இறுதியாக)
நீங்கள்
அங்கிருந்தே
எழுப்பப்படுவீர்கள்""
என்றும்
கூறினான்.
7:26.
ஆதமுடைய
மக்களே!
மெய்யாகவே,
நாம்
உங்களுக்கு
உங்களுடைய
மானத்தை
மறைக்கவும்,
உங்களுக்கு
அலங்காரமாகவும்,
ஆடையை
அளித்துள்ளோம்.
ஆயினும்
தக்வா
(பயபக்தி)
எனும்
ஆடையே
(அதைவிட)
மேலானது.
இது
அல்லாஹ்வுடைய
(அருளின்)
அடையாளங்களில்
(ஒன்றாக)
உள்ளதாகும்
- (இதைக்
கொண்டு)
நல்லுணர்வு
பெறுவார்களாக.
7:27.
ஆதமுடைய
மக்களே!
ஷைத்தான்
உங்கள்
பெற்றோர்
இருவரையும்,
அவர்களுடைய
மானத்தை
அவர்கள்
பார்க்குமாறு
அவர்களுடைய
ஆடையை
அவர்களை
விட்டும்,
களைந்து,
சுவனபதியை
விட்டு
வெளியேற்றியது
போல்
அவன்
உங்களை
(ஏமாற்றிச்)
சோதனைக்குள்ளாக்க
வேண்டாம்;
நிச்சயமாக
அவனும்,
அவன்
கூட்டத்தாரும்
உங்களைக்
கவனித்துக்
கொண்டிருக்கிறார்கள்
-
நீங்கள்
அவர்களைப்
பார்க்க
முடியாதவாறு
மெய்யாகவே
நாம்
ஷைத்தான்களை
நம்பிக்கையில்லாதவரின்
நண்பர்களாக்கி
இருக்கிறோம்.
7:28. (நம்பிக்கையில்லாத)
அவர்கள்
ஒரு
மானக்கேடான
காரியத்தைச்
செய்து
விட்டால்,
''எங்கள்
மூதாதையர்களை
இதன்
மீதே
கண்டோம்;
இன்னும்
அல்லாஹ்
எங்களை
அதைக்கொண்டே
ஏவினான்""
என்று
சொல்கிறார்கள்.
''(அப்படியல்ல!)
நிச்சயமாக
அல்லாஹ்
மானக்கேடான
செயல்களைச்
செய்யக்
கட்டளையிடமாட்டான்
-
நீங்கள்
அறியாததை
அல்லாஹ்வின்
மீது
பொய்யாகக்
கூறுகிறீர்களா?""
என்று
(நபியே!)
நீர்
கேட்பீராக.
7:29.
''என்
இறைவன்,
நீதத்தைக்
கொண்டே
ஏவியுள்ளான்;
ஒவ்வொரு
தொழுகையின்
போதும்
உங்கள்
முகங்களை
அவன்
பக்கமே
நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்;
வணக்கத்தை
அவனுக்கே
தூய்மையாக்கியவர்களாக
அவனை
அழையுங்கள்;
உங்களை
அவன்
துவக்கியது
போலவே
(அவனிடம்)
நீங்கள்
மீளுவீர்கள்""
என்று
நீர்
கூறும்.
7:30.
ஒரு
கூட்டத்தாரை
அவன்
நேர்
வழியிலாக்கினான்;
இன்னொரு
கூட்டதாருக்கு
வழிகேடு
உறுதியாகி
விட்டது
ஏனெனில்
நிச்சயமாக
அவர்கள்
அல்லாஹ்வை
விட்டு
ஷைத்தான்களை
பாதுகாவலர்களாக்கிக்
கொண்டார்கள்
-
எனினும்
தாங்கள்
நேர்வழி
பெற்றவர்கள்
என்று
எண்ணுகிறார்கள்.
7:31.
ஆதமுடைய
மக்களே!
ஒவ்வொரு
மஸ்ஜிதிலும்
தொழுங்காலம்
உங்களை
ஆடைகளால்
அழகாக்கிக்
கொள்ளுங்கள்;
உண்ணுங்கள்,
பருகுங்கள்;
எனினும்
வீண்
விரயம்
செய்யாதீர்கள்.
ஏனெனில்
அல்லாஹ்
அளவு
கடந்து
(வீண்)
விரயம்
செய்பவர்களை
நேசிப்பதில்லை.
7:32. (நபியே!)
நீர்
கேட்பீராக
''அல்லாஹ்
தன்
அடியார்களுக்காக
வெளிப்படுத்தியுள்ள
(ஆடை)
அழகையும்,
உணவு
வகைகளில்
தூய்மையானவற்றையும்
தடுத்தது
யார்?""
இன்னும்
கூறும்;
''அவை
இவ்வுலக
வாழ்க்கையில்
நம்பிக்கையாளர்களுக்கு
(அனுமதிக்கப்பட்டவையே,
எனினும்
மறுமையில்)
அவர்களுக்கு
மட்டுமே
சொந்தமானவையாகவும்
இருக்கும்""
இவ்வாறு
நாம்
நம்
வசனங்களை
அறியக்கூடிய
மக்களுக்கு
விவரிக்கின்றோம்.
7:33.
''என்
இறைவன்
ஹராம்
எனத்
தடுத்திருப்பவையெல்லாம்,
வெளிப்படையான
அல்லது
அந்தரங்கமான,
மானக்கேடான
செயல்கள்,பாவங்கள்;,
நியாயமின்றி
(ஒருவருக்கொருவர்)
கொடுமை
செய்வது
ஆதாரமில்லாமலிருக்கும்
போதே
நீங்கள்
அல்லாஹ்வுக்கு
இணைகற்பித்தல்,
நீங்கள்
அறியாவற்றை
அல்லாஹ்வின்
மீது
(பொய்யாகக்)
கூறுவது
(ஆகிய
இவையே
என்று
நபியே!)
நீர்
கூறுவீராக.
7:34.
ஒவ்வோரு
கூட்டதாருக்கும்
(வாழ்வுக்கும்,
வீழ்வுக்கும்)
ஒரு
காலக்கெடு
உண்டு,
அவர்களுடைய
கெடு
வந்துவிட்டால்
அவர்கள்
ஒருகணப்
பொழுதேனும்
பிந்தவும்
மாட்டார்கள்;
முந்தவும்
மாட்டார்கள்.
7:35.
ஆதமுடைய
மக்களே!
உங்களிடம்
உங்களிலிருந்தே
(நம்)
தூதர்கள்
வந்து,
என்
வசனங்களை
உங்களுக்கு
விளக்கினால்,
அப்போது
எவர்கள்
பயபக்தி
கொண்டு
(தம்
வாழ்க்கையில்)
திருந்திக்
கொண்டார்களோ
அவர்களுக்கு
அச்சமுமில்லை
அவர்கள்
துக்கப்படவுமாட்டார்கள்.
7:36.
ஆனால்
நம்
வசனங்களை
பொய்பித்து
(அவற்றைப்
புறக்கணித்துப்)
பெருமையடித்தார்வளோ
அவர்கள்
நரகவாசிகளேயாவார்கள்
-
அதில்
அவர்கள்
(என்றென்றும்)
தங்கி
விடுவார்கள்.
7:37.
எவன்
அல்லாஹ்வின்
மீது
பொய்க்கற்பனை
செய்து
அவனுடைய
வசனங்களையும்
நிராகரிக்கிறானோ,
அவனைவிட
மிக
அநியாயக்காரன்
யார்?
எனினும்
அத்தகையவர்களுக்கு
அவர்களுக்கு
விதிக்கப்பட்ட
(உணவும்,
பொருள்களிலுள்ள)
பங்கு
(இவ்வுலகில்)
கிடைத்துக்கொண்டே
இருக்கும்;
நம்முடைய
(வான)
தூதர்கள்
அவர்களிடம்
வந்து,
அவர்(களுடைய
உயிர்)களைக்
கைப்பற்றும்
போது
(அவ்வான
தூதர்கள்)
''அல்லாஹ்வை
விட்டு
எவர்களை
அழைத்துக்
கொண்டு
இருந்தீர்களோ,
அவர்கள்
எங்கே?""
எனக்
கேட்பார்கள்;
(அதற்கு)
''அவர்கள்
எங்களை
விட்டுக்
காணாமல்
(மறைந்து
போய்)
விட்டார்கள்""
என்று
கூறி
மெய்யாகவே
தாம்
நிராகரிப்பவர்களாக
-
இருந்ததாகத்
தங்களுக்கு
எதிராகவே
அவர்கள்
சாட்சி
கூறுவார்கள்.
7:38. (அல்லாஹ்)
கூறுவான்;
''ஜின்கள்இ
மனிதர்கள்
கூட்டத்தார்களிலிருந்து
உங்களுக்கு
முன்
சென்றவர்களுடன்
நீங்களும்
(நரக)
நெருப்பில்
நுழையுங்கள்.""
ஒவ்வொரு
கூட்டத்தாரும்இ
நரகத்தில்
நுழையும்போதெல்லாம்இ
(தங்களுக்கு
முன்இ
அங்கு
வந்துள்ள)
தம்
இனத்தாரைச்
சபிப்பார்கள்;
அவர்கள்
யாவரும்
நரகத்தையடைந்து
விட்ட
பின்னர்இ
பின்
வந்தவர்கள்
முன்
வந்தவர்களைப்பற்றிஇ
''எங்கள்
இறைவனே!
இவர்கள்
தான்
எங்களை
வழி
கெடுத்தார்கள்;
ஆதலால்
இவர்களுக்கு
நரகத்தில்
இரு
மடங்கு
வேதனையைக்
கொடு""
என்று
சொல்வார்கள்.
அவன்
கூறுவான்;
''உங்களில்
ஒவ்வொருவருக்கும்
இரட்டிப்பு
(வேதனை)
உண்டு
-
ஆனால்
நீங்கள்
அதை
அறியமாட்டீர்கள்.""
7:39.
அவர்களில்
முன்
வந்தவர்கள்இ
பின்
வந்தவர்களை
நோக்கிஇ
''எங்களைவிட
உங்களுக்கு
யாதொரு
மேன்மையும்
கிடையாதுஇ
ஆதலால்
நீங்களாகவே
சம்பாதித்துக்
கொண்ட
(தீ)
வினையின்
காரணமாக
நீங்களும்
(இருமடங்கு)
வேதனையை
அனுபவியுங்கள்""
என்று
கூறுவார்கள்.
7:40.
எவர்கள்
நம்
வசனங்களை
பொய்ப்பித்து
இன்னும்
(அவற்றைப்
புறக்கணித்து)
பெருமையடித்தார்களோ
நிச்சயமாக
அவர்களுக்கு
வானத்தின்
(அருள்)
வாயில்கள்
திறக்கப்பட
மாட்டா
-
மேலும்
ஊசியின்
காதில்
ஒட்டகம்
நுழையும்
வரையில்
அவர்கள்
சுவனபதியில்
நுழைய
மாட்டார்கள்
-
இவ்வாறே
குற்றம்
செய்பவர்களுக்கு
கூலி
கொடுப்போம்.
7:41.
அவர்களுக்கு
நரகத்தில்
(நெருப்பு)
விரிப்புகளும்இ
(போர்த்திக்
கொள்வதற்கு)
அவர்களுக்கு
மேலே
நெருப்புப்
போர்வைகளும்
உண்டு
-
இன்னும்
இவ்வாறே
அநியாயம்
செய்பவர்களுக்கு
நாம்
கூலி
கொடுப்போம்.
7:42.
ஆனால்இ
எவர்கள்
நம்பிக்கை
கொண்டு
நற்கருமங்கள்
செய்கிறார்களோ
-
எந்த
ஓர்
ஆத்மாவையும்
அதன்
சக்திக்குமீறி
நாம்
சிரமப்படுத்த
மாட்டோம்;
அவர்கள்
சுவனவாசிகளாக
இருப்பார்கள்
-
அவர்கள்
அதிலேயே
என்றென்றும்
தங்கியிருப்பார்கள்.
7:43.
தவிர
(இவ்வுலகில்
ஒருவர்
மீது
ஒருவர்
கொண்டிருந்த)
குரோதத்தையும்
அவர்களுடைய
இதயங்களிலிருந்து
நீக்கி
விடுவோம்;
அவர்களுக்கு
அருகில்
ஆறுகள்
ஓடிக்கொண்டிருக்கும்;
இன்னும்
அவர்கள்
கூறுவார்கள்;
''இ(ந்த
பாக்கியத்தைப்
பெறுவ)தற்குரிய
நேர்வழியை
எங்களுக்குக்
காட்டிய
அல்லாஹ்வுக்கே
எல்லாப்புகழும்
உரியதாகும்;
அல்லாஹ்
எங்களுக்கு
நேர்
வழி
காட்டியிராவிட்டால்இ
ஒருக்காலும்
நாங்கள்
நேர்வழி
அடைந்திருக்கமாட்டோம்
-
நிச்சயமாக
எங்கள்
இறைவனுடைய
தூதர்கள்
உண்மை
(மார்க்கத்தை)யே
(நம்மிடம்)
கொண்டு
வந்தார்கள்""
(இதற்கு
பதிலாகஇ
''பூமியில்)
நீங்கள்
செய்து
கொண்டிருந்த
(நன்மையான)
காரியங்களின்
காரணமாகவே
நீங்கள்
இந்த
சுவனபதியின்
வாரிசுகளாக்கப்பட்டு
இருக்கிறீர்கள்""
என்று
அழைக்கப்படுவார்கள்.
7:44.
சுவர்க்க
வாசிகள்இ
நரக
வாசிகளை
அழைத்துஇ
''எங்களுக்கு
எங்கள்
இறைவன்
அளித்திருந்த
வாக்குறுதியை
நிச்சயமாகவும்இ
உண்மையாகவும்
பெற்றுக்
கொண்டோம்;
உங்களுக்கு
உங்கள்
இறைவன்
அளித்த
வாக்குறுதியை
நீங்கள்
உண்மையில்
பெற்றுக்
கொண்டீர்களா?""
என்று
கேட்பார்கள்.
அதற்கு
அவர்கள்இ
''ஆம்
(பெற்றுக்
கொண்டோம்""
என்பார்கள்.
அப்போது
அவர்களுக்கிடையே
அறிவிப்பவர்
ஒருவர்இ
''அக்கிரமக்காரர்களின்
மீது
அல்லாஹ்வின்
சாபம்
உண்டாவதாக!""
என்று
அறிவிப்பார்.
7:45. (ஏனெனில்)
அவர்கள்
அல்லாஹ்வின்
(நேர்)வழியைவிட்டு
(மனிதர்களைத்)
தடுத்துஇ
அதைக்
கோணலாக்கவும்
விரும்பினர்;
மேலும்
அவர்கள்
மறுமையையும்
(நம்பாது)
மறுத்தனர்.
7:46. (நரகவாசிகள்இ
சுவர்க்க
வாசிகள்
ஆகிய)
இவர்களுக்கிடையே
ஒரு
திரை(யான
மதில்)
இருக்கும்;
அதன்
சிகரங்களில்
அநேக
மனிதர்கள்
இருப்பார்கள்;
(நரக
வாசிகள்இ
சுவர்க்க
வாசிகள்)
ஒவ்வொருவரையும்
அவர்களுடைய
அடையாளங்களைக்
கொண்டு
அறிந்து
கொள்வார்கள்;
அவர்கள்
சுவர்க்க
வாசிகளை
அழைத்து
''ஸலாமுன்
அலைக்கும்
(உங்கள்
மீது
சாந்தியும்
சமாதானமும்
உண்டாகுக!)""
என்று
கூறுவார்கள்;
அவர்கள்
இன்னும்
சுவர்க்கத்தில்
நுழையவில்லை
-
அவர்கள்
(அதில்
நுழைய)
ஆவலுடன்
இருக்கின்றார்கள்.
7:47.
அவர்களுடைய
பார்வைகள்
நரகவாசிகளின்
பக்கம்
திருப்பப்பட்டால்இ
அவர்கள்
''எங்கள்
இறைவனே!
எங்களை
(இந்த)
அக்கரமக்காரர்களுடனே
ஆக்கி
விடாதே""
என்று
கூறுவார்கள்.
7:48.
சிகரங்களிலிருப்பவர்கள்இ
சில
மனிதர்களை
-
அவர்கள்
அடையாளங்களால்
அறிந்து
கொண்டு
-
அவர்களைக்
கூப்பிட்டுக்
கூறுவார்கள்;
''நீங்கள்
உலகத்தில்
சேமித்து
வைத்திருந்தவையும்இ
நீங்கள்
பெருமையடித்துக்
கொண்டிருந்தவையும்இ
உங்களுக்குப்
பலனளிக்கவில்லையே!""
7:49.
''அல்லாஹ்
இவர்களுக்கு
அருள்புரிய
மாட்டான்
என்று
நீங்கள்
சத்தியம்
செய்து
கூறிக்கொண்டிருந்தீர்களே
அவர்கள்
இவர்கள்
தானே?
(என்று
சுவனவாசிகளைச்
சுட்டிக்
காண்பித்துஇ)
நீங்கள்
சுவனபதியில்
நுழையுங்கள்;
உங்களுக்கு
எவ்வித
பயமுமில்லை
நீங்கள்
துக்கப்படவும்
மாட்டீர்கள்""
என்றும்
கூறுவார்கள்.
7:50.
நரகவாசிகள்இ
சுவர்க்கவாசிகளை
அழைத்துஇ
''தண்ணீரில்
கொஞ்சமேனும்
அல்லது
அல்லாஹ்
உங்களுக்கு
அளித்துள்ள
உணவில்
சிறிதேனும்
எங்களுக்குக்
கொடுங்கள்""
எனக்
கேட்பார்கள்;
அதற்கு
அவர்கள்;
''நிச்சயமாக
அல்லாஹ்
இவ்விரண்டையும்
காஃபிர்கள்
மீது
தடுத்து
(ஹராம்
ஆக்கி)
விட்டான்""
என்று
கூறுவார்கள்.
7:51. (ஏனென்றால்)
அவர்கள்
தங்களுடைய
மார்க்கத்தை
வீணாகவும்இ
விளையாட்டாகவும்
எடுத்துக்
கொண்டார்கள்;
இன்னும்
அவர்களை
இவ்வுலக
வாழ்க்கை
மயக்கி
விட்டது
எனவே
அவர்கள்
நம்
வசனங்களை
நிராகரித்து
இந்த
இறுதி
நாளின்
சந்திப்பை
மறந்து
விட்டது
போன்றுஇ
இன்று
நாம்
அவர்களை
மறந்து
விடுகிறோம்.
7:52.
நிச்சயமாக
நாம்
அவர்களுக்கு
ஒரு
வேதத்தை
கொடுத்தோம்.
அதை
நாம்
பூரண
ஞானத்தைக்
கொண்டு
விளக்கியுள்ளோம்;
அது
நம்பிக்கை
கொள்ளும்
மக்களுக்கு
நேர்
வழியாகவும்இ
அருளாகவும்
இருக்கிறது.
7:53.
இவர்கள்
(தங்களுக்கு
எச்சரிக்கை
செய்யப்பட்டு
வந்த)
இறுதியையன்றி
வேறு
எதையும்
எதிர்பார்க்கிறார்களா?
அந்தத்
தண்டனை
நாள்
வந்தபொழுதுஇ
இதற்குமுன்
அதனை
முற்றிலும்
மறந்திருந்த
இவர்கள்இ
''நிச்சயமாக
எங்கள்
இறைவனின்
தூதர்கள்
சத்திய(வேத)த்தையே
கொண்டு
வந்தனர்இ
எங்களுக்குப்
பரிந்து
பேசக்கூடியவர்கள்
எவரும்
இருக்கின்றனரா?
அவ்வாறாயின்
அவர்கள்
எங்களுக்காகப்
பரிந்து
பேசட்டும்;
அல்லது
நாங்கள்
(உலகத்திற்குத்)
திருப்பி
அனுப்பப்படுவோமா?
அப்படியாயின்இ
நாங்கள்
முன்செய்து
கொண்டிருந்த
(தீய)வற்றை
விட்டு
வேறு
(நன்மைகளையே)
செய்வோம்""
என்று
கூறுவார்கள்
-
நிச்சயமாக
அவர்கள்
தமக்குத்
தாமே
இழப்புக்கு
ஆளாக்கிக்
கொண்டார்கள்இ
அவர்கள்
கற்பனை
செய்து
வந்தவை
அவர்களை
விட்டு
மறைந்து
விடும்.
7:54.
நிச்சயமாக
உங்கள்
இறைவனாகிய
அல்லாஹ்
தான்
ஆறு
நாட்களில்
வானங்களையும்இ
பூமியையும்
படைத்துப்
பின்
அர்ஷின்
மீது
தன்
ஆட்சியை
அமைத்தான்
-
அவனே
இரவைக்
கொண்டு
பகலை
மூடுகிறான்;
அவ்விரவு
பகலை
வெகு
விரைவாக
பின்
தொடர்கிறது
இன்னும்
சூரியனையும்;
சந்திரனையும்இ
நட்சத்திரங்களையும்
தன்
கட்டளைக்கு
-
ஆட்சிக்குக்
-
கீழ்படிந்தவையாக(ப்
படைத்தான்);
படைப்பும்இ
ஆட்சியும்
அவனுக்கே
சொந்தமல்லவா?
அகிலங்களுக்கெல்லாம்
இறைவனாகிய
(அவற்றைப்
படைத்துஇ
பரிபாலித்துப்
பரிபக்குவப்படுத்தும்)
அல்லாஹ்வே
மிகவும்
பாக்கியமுடையவன்.
7:55. (ஆகவேஇ
முஃமின்களே!)
உங்களுடைய
இறைவனிடம்
பணிவாகவும்இ
அந்தரங்கமாகவும்
பிரார்த்தனை
செய்யுங்கள்
-
வரம்பு
மீறியவர்கவளை
நிச்சயமாக
அவன்
நேசிப்பதில்லை.
7:56. (மேலும்இ)
பூமியில்
(அமைதி
உண்டாகி)
சீர்திருத்தம்
ஏற்பட்ட
பின்னர்
அதில்
குழப்பம்
உண்டாக்காதீர்கள்;
அச்சத்தோடும்
ஆசையோடும்
அவனை
பிரார்த்தியுங்கள்
-
நிச்சயமாக
அல்லாஹ்வின்
அருள்
நன்மை
செய்வோருக்கு
மிக
சமீபத்தில்
இருக்கிறது.
7:57.
அவன்
தான்இ
தன்னுடைய
அருள்
(மாரிக்)கு
முன்இ
நற்செய்தியாக
(குளிர்ந்த)
காற்றுகளை
அனுப்பிவைக்கிறான்
அவை
கனத்த
மேகங்களைச்
சுமக்கலானதும்
நாம்
அவற்றை
இறந்து
கிடக்கும்
(வரண்ட)
பூமியின்
பக்கம்
ஓட்டிச்
சென்றுஇ
அதிலிருந்து
மழையைப்
பொழியச்
செய்கின்றோம்;
பின்னர்
அதைக்
கொண்டு
எல்லாவிதமான
கனிவகை
(விளைச்சல்)களையும்
வெளிப்படுத்துகின்றோம்
-
இவ்வாறே
நாம்
இறந்தவர்களையும்
எழுப்புவோம்.
(எனவே
இவற்றை
யெல்லாம்
சிந்தித்து)
நீங்கள்
நல்லுணர்வு
பெறுவீர்களாக.
7:58. (ஒரே
விதமான
மழையைக்
கொண்டே)
வளமான
பூமி
தன்
இறைவன்
கட்டளையைக்
கொண்டு
(செழுமையாகப்)
பயிர்
(பச்சை)களை
வெளிப்படுத்துகிறது
ஆனால்
கெட்ட
களர்
நிலம்
சொற்பமான
விளைச்சலையே
வெளிப்படுத்துகிறது
நன்றி
செலுத்தும்
மக்களுக்கு
இவ்வாறே
நாம்
வசனங்களை
விவரிக்கின்றோம்.
7:59.
நிச்சயமாக
நாம்
நூஹை
அவருடைய
கூட்டத்தாரிடம்
அனுப்பி
வைத்தோம்;
அவர்(தம்
கூட்டத்தாரிடம்)இ
''என்
கூட்டத்தாரே!
அல்லாஹ்வையே
வணங்குங்கள்இ
உங்களுக்கு
அவனன்றி
வேறு
நாயனில்லை
நிச்சயமாக
நான்
உங்களுக்கு
வர
இருக்கும்
மகத்தான
ஒரு
நாளின்
வேதனைப்பற்றி
அஞ்சுகிறேன்
என்று
கூறினார்.
7:60.
அவருடைய
கூட்டத்தாரிலுள்ள
தலைவர்கள்இ
''மெய்யாகவேஇ
நாங்கள்
உம்மை
பகிரங்கமான
வழிகேட்டில்
தான்
திடமாக
பார்க்கிறோம்""
என்று
கூறினார்கள்.
7:61.
அதற்கு
(நூஹ{)
''என்
கூட்டத்தார்களே!
என்னிடம்
எந்த
வழிகேடும்
இல்லை
மாறாக
அகிலங்களின்
இறைவனாகிய
(அல்லாஹ்வின்)
தூதனாகவே
நான்
இருக்கின்றேன்""
என்று
கூறினார்.
7:62.
''நான்
என்
இறைவனுடைய
தூதையே
உங்களுக்கு
எடுத்துக்
கூறி;
உங்களுக்கு
நற்போதனையும்
செய்கின்றேன்
-
மேலும்
நீங்கள்
அறியாதவற்றை
அல்லாஹ்விடமிருந்து
நான்
அறிகிறேன்""
(என்று
கூறினார்).
7:63.
உங்களை
எச்சரிப்பதற்காகவும்
நீங்கள்
அஞ்சி
நடப்பதற்காகவும்
உங்களுக்கு
அருள்
புரியப்பட
வேண்டுமென்பதற்காகவும்
உங்களைச்
சேர்ந்த
ஒரு
மனிதர்
மீது
உங்கள்
இறைவனிடமிருந்து
நற்போதனை
உங்களுக்கு
வருவதைப்
பற்றி
நீங்கள்
ஆச்சரியப்படுவீர்களா?
7:64.
அப்போதும்
அவர்கள்
அவரைப்
பொய்யரெனவே
கூறினர்;
எனவேஇ
நாம்
அவரையும்
அவருடன்
இருந்தவர்களையும்
கப்பலில்
(ஏற்றிக்)
காப்பாற்றினோம்;
இன்னும்
நம்
வசனங்களைப்
பொய்யெனக்
கூறியவர்களை
(பிரளயத்தில்)
மூழ்கடித்தோம்;
நிச்சயமாக
அவர்கள்
(உண்மை
காண
முடியா)
குருட்டுக்
கூட்டதாராகவே
இருந்தனர்.
7:65.
இன்னும்இ
ஆது
கூட்டத்தாரிடம்
அவர்களுடைய
சதோரர்
ஹ_தை
(நபியாக
அனுப்பி
வைத்தோம்;)
அவர்இ
''என்
சமூகத்தாரே!
நீங்கள்
அல்லாஹ்வையே
வணங்குங்கள்;
அவனையன்றி
உங்களுக்கு
வேறு
நாயனில்லை
-
நீங்கள்
(அவனுக்கு)
அஞ்சி(ப்
பேணி)
நடக்க
வேண்டாமா?""
என்று
கேட்டார்.
7:66.
அவருடைய
சமூகத்தாரில்
நிராகரித்தவர்களின்
தலைவர்கள்இ
(அவரை
நோக்கி)
''நிச்சயமாக
நாங்கள்
உம்மை
மடமையில்
(மூழ்கிக்கிடப்பவராகவே)
காண்கின்றோம்;
மேலும்
நிச்சயமாக
நாம்
உம்மைப்
பொய்யர்களில்
ஒருவராகக்
கருதுகிறோம்""
என்று
கூறினார்கள்.
7:67.
அதற்கு
அவர்?
''என்
சமூகத்தாரே!
எந்த
மடமையும்
என்னிடம்
இல்லை
-
மாறாகஇ
அகிலங்களின்
இறைவனாகிய
- (அல்லாஹ்வின்)
தூதன்
ஆவேன்""
என்று
கூறினார்.
7:68.
''நான்
என்
இறைவனுடைய
தூதையே
உங்களிடம்
எடுத்துக்
கூறுகின்றேன்.
மேலும்
நான்
உங்களுக்கு
நம்பிக்கையான
உபதேசியாகவும்
இருக்கின்றேன்""
(என்று
கூறினார்).
7:69.
''உங்களுக்கு
அச்சமூட்டி
எச்சரிக்கை
செய்வதற்காக
உங்களிலுள்ள
ஒரு
மனிதருக்கு
உங்கள்
இறைவனிடமிருந்து
நற்போதனை
வந்துள்ளது
பற்றி
நீங்கள்
ஆச்சரியப்படுகிறீர்களா?
நூஹ{டைய
சமூகத்தாருக்குப்
பின்னர்
அவன்
உங்களைப்
பூமியில்
பின்தோன்றல்களாக்கி
வைத்துஇ
உங்கள்
உடலில்
பலத்தையும்
அதிகமாக்கியதை
நினைவு
கூறுங்கள்
-
எனவே
அல்லாஹ்வின்
அருட்கொடைகளை
எல்லாம்
நினைத்துப்
பாருங்கள்;
நீங்கள்
வெற்றி
பெறுவீர்கள்""
(என்றும்
கூறினார்)
7:70.
அதற்கு
அவர்கள்
''
எங்கள்
மூதாதையர்கள்
வழிபட்ட
தெய்வங்களை
விட்டு
விட்டு;
அல்லாஹ்
ஒருவனையே
வணங்க
வேண்டும்
என்பதற்காகவா
நீர்
எங்களிடம்
வந்திருக்கிறீர்?
நீர்
உண்மையாளராக
இருந்தால்இ
நீர்
அச்சுறுத்துவதை
எம்மிடம்
கொண்டுவாரும்""
என்று
கூறினார்கள்.
7:71.
அதற்கு
அவர்இ
''உங்களுடைய
இறைவனின்
கோபமும்இ
வேதனையும்
உங்களுக்கு
ஏற்பட்டுவிட்டன
அல்லாஹ்
எந்தவோர்
ஆதாரத்தையும்
இறக்கி
வைக்காத
நீங்களும்
உங்களுடைய
முன்னோர்களும்
பெயர்
சூட்டிக்
கொண்டீர்களே
அந்த
பெயர்கள்
விஷயத்திலேயா
என்னிடத்திலே
நீங்கள்
தர்க்கம்
செய்கிறீர்கள்;
(எனவே
உங்கள்
வேதனையை)
நீங்கள்
எதிர்பார்த்துக்
கொண்டிருங்கள்;
நிச்சயமாக
நானும்
உங்களோடு
எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறேன்""
என்று
கூறினார்.
7:72.
ஆகவேஇ
நாம்
அவரையும்
அவருடன்
இருந்தவர்களையும்இ
நம்முடைய
அருளைக்கொண்டு
காப்பற்றினோம்;
நம்
வசனங்களைப்
பொய்யெனக்கூறிஇ