|
அத்தியாயம்-81
ஸ_ரத்துத்
தக்வீர்
(சுருட்டுதல்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
81:1.
சூரியன்
(ஒளியில்லாததாகச்)
சுருட்டப்படும் போது
81:2.
நட்சத்திரங்கள்
(ஒளியிழந்து)
உதிர்ந்து விழும்போது-
81:3.
மலைகள் பெயர்க்கப்படும் போது-
81:4.
சூல் நிறைந்த ஒட்டகைகள்
(கவனிப்பாரற்று)
விடப்படும் போது-
81:5.
காட்டு மிருகங்கள்
(மனிதர்களுடனும்,
இதர
பிராணிகளுடனும்)
ஒன்று சேர்க்கப்படும்போது-
81:6.
கடல்கள் தீ மூட்டப்படும்போது-
81:7.
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
81:8.
உயிருடன் புதைக்கப்பட்ட பெண்
(குழந்தை)
வினவப்படும் போது-
81:9. ''எந்தக்
குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?""
என்று-
81:10.
பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
81:11.
வானம் அகற்றப்படும் போது-
81:12.
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும்
போது-
81:13.
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
81:14.
ஒவ்வோர் ஆத்மாவும்,
தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
81:15.
எனவே,
பின்னே விலகிச் செல்பவை
(கிரகங்களின்)
மீது சத்தியமாக-
81:16.
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை
(மீதும்),
81:17.
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
81:18.
மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும்
சத்தியமாக.
81:19.
நிச்சயமாக
(இக்குர்ஆன்)
மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர்
(ஜிப்ரயீல்
மூலம் வந்த)
சொல்லாகும்.
81:20. (அவர்)
சக்திமிக்கவர்;
அர்ஷ{க்குடையவனிடம்
பெரும் பதவியுடையவர்.
81:21. (வானவர்
தம்)
தலைவர்;
அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
81:22.
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
81:23.
அவர் திட்டமாக அவரை
(ஜிப்ரயீலை)
தெளிவான அடிவானத்தில் கண்டார்.
81:24.
மேலும்,
அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம்
செய்பவரல்லர்.
81:25.
அன்றியும்,
இது
விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
81:26.
எனவே,
(நேர்வழியை
விட்டும்)
நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
81:27.
இது,
அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
81:28.
உங்களில் நின்றும் யார் நேர்வழியை
விரும்புகிறாரோ,
அவருக்கு
(நல்லுபதேசமாகும்).
81:29.
ஆயினும்,
அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்
நாடினாலன்றி நீங்கள்
(நல்லுபதேசம்
பெற)
நாடமாட்டீர்கள்.
|