|
அத்தியாயம்-92
ஸ_ரத்துல்
லைல்
(இரவு)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
92:1. (இருளால்)
தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
92:2.
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
92:3.
ஆணையும்,
பெண்ணையும்
(அவன்)
படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
92:4.
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
92:5.
எனவே எவர்
(தானதருமம்)
கொடுத்து,
(தன்
இறைவனிடம்)
பயபக்தியுடன் நடந்து,
92:6.
நல்லவற்றை
(அவை
நல்லவையென்று)
உண்மையாக்குகின்றாரோ,
92:7.
அவருக்கு நாம்
(சுவர்க்கத்தின்
வழியை)
இலேசாக்குவோம்.
92:8.
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து
அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக்
கருதுகிறானோ,
92:9.
இன்னும்,
நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
92:10.
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள
(நரகத்தின்)
வழியைத் தான் இலேசாக்குவோம்.
92:11.
ஆகவே அவன்
(நரகத்தில்)
விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப்
பலன் அளிக்காது.
92:12.
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது
இருக்கிறது.
92:13.
அன்றியும் பிந்தியதும்
(மறுமையும்)
முந்தியதும்
(இம்மையும்)
நம்முடையவையே ஆகும்.
92:14.
ஆதலின்,
கொழுந்துவிட்டெறியும்
(நரக)
நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி
எச்சரிக்கிறேன்.
92:15.
மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர
(வேறு)
எவனும் அதில் புகமாட்டான்.
92:16.
எத்தகையவனென்றால் அவன்
(நம்
வசனங்களைப்)
பொய்யாக்கி,
முகம் திரும்பினான்.
92:17.
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து
தொலைவிலாக்கப்படுவார்.
92:18. (அவர்
எத்தகையோரென்றால்)
தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை
(இறைவன்
பாதையில்)
கொடுக்கிறார்.
92:19.
மேலும்,
தாம் பதில்
(ஈடு)
செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது
இல்லாதிருந்தும்.
92:20. மகா மேலான தம் இறைவனின்
திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம்
கொடுக்கிறார்).
92:21. வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின்
அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.
|