|
அத்தியாயம்-93
ஸ_ரத்துள்
ளுஹா (முற்பகல்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
93:1. முற்பகல் மீது சத்தியமாக
93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது
சத்தியமாக-
93:3. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை;
அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
93:4. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை
(இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
93:5. இன்னும்,
உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர்
பதவிகளைக்) கொடுப்பான்;
அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
93:6. (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு,
அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
93:7. இன்னும்,
உம்மை வழியற்றவராகக் கண்டு அவன்,
(உம்மை)
நேர்வழியில் செலுத்தினான்.
93:8. மேலும்,
அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு,
(உம்மைச்
செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
93:9. எனவே,
நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
93:10. யாசிப்போரை விரட்டாதீர்.
93:11. மேலும்,
உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி
(பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
|