|
அத்தியாயம்-95
ஸ_ரத்துத்
தீன்
(அத்தி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
95:1.
அத்தியின் மீதும்இ ஒலிவத்தின்
(ஜைத்தூன்)
மீதும் சத்தியமாக-
95:2. 'ஸினாய்"
மலையின் மீதும் சத்தியமாக-
95:3.
மேலும் அபயமளிக்கும் இந்த
(மக்கமா)
நகரத்தின் மீதும் சத்தியமாக-
95:4.
திடமாகஇ நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில்
படைத்தோம்.
95:5.
பின்னர்
(அவன்
செயல்களின் காரணமாக)
அவனைத் தாழ்ந்தவர்களில்இ மிக்க
தாழ்ந்தவனாக்கினோம்.
95:6.
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான
(நல்ல)
அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர
- (நல்லவர்களான)
அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
95:7.
எனவே
(இதற்குப்)
பின்னர்இ நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம்
எது பொய்யாக்க முடியும்?
95:8.
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக
மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
|